மக்களுக்கு பொங்கல் திருநாளில் நல்ல செய்தி... அதுவும் முதலமைச்சர் கைகளால்!

Kilambakkam Bus Terminus: தமிழ் புத்தாண்டான தை ஒன்றாம் தேதிக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டில் வரும் என்றும் முதலமைச்சர் கைகளால் திறந்து வைக்கப்பட இருப்பதாகவும் அமைச்சர் சேகர்பாபு தகவல் அளித்துள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Dec 25, 2023, 11:01 AM IST
  • ரூ. 400 கோடியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.
  • இங்கு 1200 மீட்டர் அளவிற்கு மழை நீர் வடிகால் அமைப்பு பணி நடந்தது.
  • இது 86 ஏக்கர் நில பரப்பளவில் அமைந்திருக்கின்றது.
மக்களுக்கு பொங்கல் திருநாளில் நல்ல செய்தி... அதுவும் முதலமைச்சர் கைகளால்! title=

Tamil Nadu Latest News: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயங்கக்கூடிய தென் மாவட்ட பேருந்துகளால் சென்னை புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு கிளாம்பாக்கம் பகுதியில் சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவிற்காக காத்துக் கொண்டிருக்கிறது. 

அமைச்சர்கள் இன்று ஆய்வு

கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக திறப்பு விழா பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று (டிச.25) கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன் மற்றும் சேகர் பாபு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். பேருந்து முனையம் திறப்பு விழாவிற்கு எங்கு மேடை அமைக்கப்பட வேண்டும், பேருந்து முனையும் திறப்பு விழா கல்வெட்டு அமைக்கப்படும் இடம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி (M. Karunanidhi) சிலை அமைக்கப்பட இருக்கும் இடம் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டனர். அதேபோன்று நிறைவடைந்துள்ள மழை நீர் வடிகால் பணியையும் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் படிக்க | முதல்வர் ஸ்டாலினை அழைத்து பேசிய பிரதமர் மோடி... முழு பின்னணி இதோ!

இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு தெரிவித்ததாவது,"வெகு விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக, தமிழ்நாடு முதல்வர் தொடர்ந்து பணிகள் குறித்த முன்னேற்றத்தை கேட்டு அறிந்து வருகிறார். கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் முனையம் அனைத்து, பணிகளும் நிறைவுற்று வெகு விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. வெகு விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு அமைய வேண்டும் என்பதற்காக தொடர் முயற்சியாக அமைச்சர் தா.மோ. அன்பரசன் சென்னை பெருநகர் வளர்ச்சி குடும்பத்திற்கு நல்ல ஒத்துழைப்பை அளித்தார். 

வசதிகள் என்னென்ன?

இந்த 86 ஏக்கர் நில பரப்பளவில் அமைந்திருக்கின்றது. இதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்துகின்ற முயற்சி முழுமை பெற்று இருக்கின்றன. இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பே இந்த பேருந்து நிலையம் திறக்கின்ற சூழ்நிலை இருந்தும் தள்ளி போனதற்கான காரணம் மழை காலங்களில், பெருமளவு தண்ணீர் தேங்கி நின்றது. 1200 மீட்டர் அளவிற்கு மழை நீர் வடிகால் அமைப்பு பணி நடந்தது. அந்த பணி தற்போது நிறைவடைந்துள்ளன. 

பேருந்து நிலையம் திறக்கப்பட்டால் 2310 பேருந்துகள் தினந்தோறும் இங்கிருந்து இயக்கப்படும். அதில் 840 பேருந்துகள் ஆம்னி பேருந்துகள் உள்ளடக்கும். கிட்டத்தட்ட ஒரு லட்சம் மக்கள் இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தலாம். அப்படி வருகின்ற மக்களுக்கு தேவையான உணவு வசதி, அதே போல் திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டால் அவர்களுக்கு உண்டான மருத்துவ சிகிச்சை, தேவைப்படுகின்ற மருந்து மாத்திரைகள் வாங்குவதற்கு மருந்து கடைகள், வருகின்ற ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஓய்வு எடுப்பதற்கு ஓய்வறை, அதேபோல் உணவகங்கள், தீயணைப்பு வாகனங்கள், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, பெட்ரோல் மற்றும் டீசல்  நிலையங்கள், காவல் நிலையம் அமைப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எப்போது  திறப்பு?

பிறக்கின்ற புத்தாண்டில் மக்கள் மகிழ்ச்சியோடு இந்த பேருந்து நிலையத்தில் இருந்து பயணிக்கின்ற வகையில் திறப்பு விழா அமையும். பிறக்கின்ற புத்தாண்டில் அதாவது தமிழ் புத்தாண்டில் (தை 1) இந்த பேருந்து நிலையத்தை மக்கள் மகிழ்ச்சியோடு பயன்படுத்துகின்ற நிலையிலே மக்களுக்கு இந்த பேருந்து நிலையம் தமிழக முதல்வர் திறந்து வைப்பார்" என தெரிவித்தார். 

'கவர்னர் வேலையை மட்டும் பாருங்கள்'

திமுக அரசு தென் மாவட்டங்களை வஞ்சிப்பதாக ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்த கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்து பேசுகையில், "முதலில் பாண்டிச்சேரி கவர்னர் வேலையை அந்த அம்மாவை பார்க்க சொல்லுங்கள். பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளராக மாற வேண்டாம். அவர்களுக்கு இருக்கின்ற பணியை பார்க்க சொல்லுங்கள். 

அவர்களுடைய எதிர்கால திட்டம் தமிழகத்தில் எங்கேயாவது நாடாளுமன்ற தொகுதியில் நின்று போட்டியிட வேண்டும் என்பதுதான். நிச்சயமாக எங்கே போட்டியிட்டாலும் ஏற்கனவே தமிழக மக்கள் தோல்வியை தான் பரிசாக கொடுத்திருக்கிறார்கள், மீண்டும் தோல்வியை தான் பரிசாக தருவார்கள். எனவே பாண்டிச்சேரிக்கு உண்டான கவர்னர் அந்த பொறுப்பிற்கான பணியை மேற்கொள்ள கொள்ள வேண்டும் அதுதான் நல்லது" என்றார். 

மேலும் படிக்க | 'உதயநிதி ஸ்டாலின் ஒன்றும் கருணாநிதி இல்லை... கத்துக்குட்டிதான்' - எல்.முருகன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News