கனமழை: தமிழகத்தில் 5 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

தமிழகம் முழுவதும் மழை பெய்து வருவதால் கன்னியாகுமரி, நீலகிரி, நெல்லை, தேனி, கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 16, 2018, 10:42 AM IST
கனமழை: தமிழகத்தில் 5 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! title=

தமிழகம் முழுவதும் மழை பெய்து வருவதால் கன்னியாகுமரி, நீலகிரி, நெல்லை, தேனி, கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் கன்னியாகுமரி, நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். 

கோவை மாவட்டம் வால்பாறை, பொள்ளாச்சி தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை தொடர்வதால் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்படுவதாக கலெக்டர் பல்லவி அறிவித்துள்ளார். 

Trending News