இன்றைய வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழை..

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

Last Updated : Jul 10, 2019, 01:37 PM IST
இன்றைய வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழை.. title=

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

வெப்பச்சலனம், தென்மேற்கு பருவக்காற்று, வட தமிழகம் மற்றும் தென் ஆந்திராவில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஆகியவற்றின் காரணமாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. வெப்பச்சலனம் காரணமாக கடலூர், நாகை, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பம் குறையும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியசாக வெப்பம் பதிவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கடலூர் மாவட்டம் மே.மாத்தூர், புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான் மலையில் தலா 7 செண்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மேலும், பருவமழை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தின் ஓரிரு பகுதிகளில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Trending News