பேரவைக்கு நான் தான் செயலாளர்- தீபா பேட்டி

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தனது தொண்டர்களின் வேண்டுகோளை ஏற்று ஜெயலலிதா பிறந்தநாளான நேற்று முன்தினம் புதிய பேரவையை துவங்கினார். 

Last Updated : Feb 26, 2017, 03:11 PM IST
பேரவைக்கு நான் தான் செயலாளர்- தீபா பேட்டி title=

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தனது தொண்டர்களின் வேண்டுகோளை ஏற்று ஜெயலலிதா பிறந்தநாளான நேற்று முன்தினம் புதிய பேரவையை துவங்கினார். 

தன்னுடைய வீட்டின் கீழ் தளத்தில் பேரவை அலுவலகத்தையும் அவர் திறந்துவைத்தார். கட்சியின் பொருளாளராக தான் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தீபா தெரிவித்து இருந்தார். 

இந்நிலையில், இன்று தி நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்:-

எம்ஜிஆர் அம்மா தீபா பேரவைக்கு தற்காலிக செயலாளராக நான் இருப்பேன். பேரவை கொள்கைகள், முழுமையான நிர்வாகிகள் பட்டியல் நாளை வெளியிடப்படும். அதிமுகவை சசிகலா குடும்பத்தினர் பின்னால் இருந்து இயக்குகிறார்கள். 

ஒ. பன்னீர்செல்வத்தை அரசியல் ரீதியாக சந்திக்கவில்லை. அதிமுக தொண்டர்களின் விருப்பம் எதுவாக இருந்தாலும் அதை ஏற்பேன். உண்மையான அதிமுக தொண்டர்கள் என்னிடம் பேசி வருகின்றனர். விரைவில் எனது அரசியல் அறிக்கைகளை எதிர்பார்க்கலாம்

இவ்வாறு அவர் கூறினார்.

Trending News