மதுரையில் தடையை மீறி ஜல்லிக்கட்டு

Last Updated : Jan 13, 2017, 01:35 PM IST
மதுரையில் தடையை மீறி ஜல்லிக்கட்டு title=

பொங்கல் திருவிழாவின் நடத்தப்படும் ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. அந்த தடையை நீக்கக் கோரி, தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

ஜல்லிக்கட்டு நடத்த பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் பொங்கலுக்கு முன் ஜல்லிக்கட்டு வழக்கில் தமிழகத்திற்கு சாதகமான தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பொங்கலுக்கு முன் ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பு வழங்க வாய்ப்பில்லை என சுப்ரீம் கோர்ட் நேற்று அறிவித்தது. இதனால் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி நடத்தப்பட்டு வரும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது.

இந்நிலையில், இன்று மதுரை அருகே உள்ள கரிசல்குளம் பகுதியில் தடையை மீறி மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. இளைஞர்கள் ஒன்று கூடி, காளையை அவிழ்த்து விட்டு அதனை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending News