எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசி பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்த இளைஞர் கைது

மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து முழக்கம் எழுப்பிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். அந்த இளைஞர் விமானத்துக்கு அழைத்துச் செல்லும் பேருந்தில் எடப்பாடி பழனிசாமியை துரோகி என அழைத்தார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 13, 2023, 02:44 PM IST
எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசி பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்த இளைஞர் கைது title=

சிவகங்கை நகரில் நடைபெறும் அதிமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மதுரை விமான நிலையம் வருகை தந்தார்.  அதில் விமானத்திலிருந்து இறங்கி விமான நிலைய ஓடுதளத்திலிருந்து விமான நிலைய வளாகத்தில் இருந்து வெளியே வர பேருந்தில் ஏறி வருகை தந்தார். அப்போது விமான நிலைய ஓடுதள பேருந்தில் அவருடன் பயணித்த சிங்கம்புணரியை சேர்ந்த யோகேஸ்வரன் என்பவர் மகன் ராஜேஷ் தனது முகநூல் பக்கத்தில் எடப்பாடி பயணிப்பதாக கூறி நேரலை செய்து கொண்டிருந்தார். 

மேலும் படிக்க | மகன், மகள்கள் சொத்தை அபகரித்து விட்டனர்... பேத்தியுடன் வந்து முதியவர் மனு!

அதில் "திடீரென எதிர்க்கட்சித் தலைவர் துரோகத்தின் அடையாளம் அண்ணன் எடப்பாடி உடன் பயணம் செய்கிறேன் என பேசிய அவர், தொடர்ந்து எடப்பாடியார் துரோகத்தின் அடையாளம் என்று ராஜேஷ் கூறியதும் கையை உயர்த்தி காமித்தார் எடப்பாடி பழனிச்சாமி. "சின்னமாவிற்கு துரோகத்தை பண்ணியவர். 10.5% இடஒதுக்கீட்டை தென்னாட்டு மக்களுக்கு எதிராக கொடுத்தவர் என கூறினார். இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமியின்  பாதுகாவலர் உடனடியாக அவரது செல்போனை பறித்து விமான நிலைய பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தார். 

தொடர்ந்து., ராஜேஷை விமான நிலைய போலீசார் அவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராஜேஷ் சிங்கப்பூரில் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சொந்த நாட்டிற்கு வந்ததும் தனது சர்ச்சை பேச்சால் தற்போது அந்த இளைஞர் சிக்கி உள்ளது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது தொடர்ந்து காவல்துறையிடம் அந்த இளைஞர் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் ஏதேனும் அரசியல் பின்பலத்தைச் சார்ந்தவரா அல்லது யாரேனும் தூண்டுதலின் பேரில் எடப்பாடி அருகே நின்று கொண்டு சமூக வலைதள பக்கமான பேஸ்புக்கில் துரோகத்தின் அடையாளம் எடப்பாடி எனக் கூறி வீடியோ வெளியிட்டுள்ளது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மேலும் படிக்க | CPCL: நாகூர் பட்டினச்சேரியில் கச்சா எண்ணெய் குழாயில் மீண்டும் கசிவு! மக்கள் பீதி

மேலும் படிக்க | அண்ணாமலை கீழ்ப்பாக்கம் போங்க .. ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி விளாசல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News