மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகிய குமரவேல்; காரணம் என்ன?

மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகுவதாக திரு சி.கே.குமரவேல் அவர்கள் தெரிவித்திருப்பதாக வந்திருக்கும் தகவல் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது!

Last Updated : Mar 18, 2019, 03:50 PM IST
மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகிய குமரவேல்; காரணம் என்ன? title=

மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகுவதாக திரு சி.கே.குமரவேல் அவர்கள் தெரிவித்திருப்பதாக வந்திருக்கும் தகவல் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது!

இதுதொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதவாவது...

"மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் 2019 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல், கடந்த ஒரு வார காலமாக நடைப்பெற்று வருகிறது.

அந்த நேர்காணல் முடிவு பெறாத வேளையில், திரு சி.கே. குமரவேல் அவர்களின் வலைத்தளங்களில் குறிப்பாக பேஸ்புக் பக்கத்தில், அவர் கடலூர் பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியிட்டிருந்தார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறும் செயல்கள் எவ்விதத்திலும் அனுமதிக்காது.

ஜனநாயக முறைப்படி வேட்பாளர் விருப்பமனு பெறப்பட்டு, அவர்களுக்கு நேர்காணல் நடைபெற்றுக்கொண்டிருக்கையில், இன்னும் பல நூறு மனுதாரர்கள் தங்களின் நேர்காணலுக்காக காத்திருக்கின்ற சூழலில், நேர்காணலுக்கு கூட வராமல், தான் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக திரு சி.கே. குமரவேல் அறிவித்து இருப்பது கட்சி கட்டுப்பாடுகளுக்கு முரணான செயல்.

இந்நிலையில் சி.கே. குமரவேல் அவர்களிடம் இது குறித்து விளக்கம் கேட்டபோது, அவர் அளித்த விளக்கம் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இல்லை.

தலைமை அறிவிப்பதற்கு முன்னரே, தன்னைத் தானே வேட்பாளராக வெளிப்படுத்திகொள்வது கட்சி கட்டுப்பாட்டிற்கு முரணான ஒரு செயல் என்பதே கட்சின் நிலைப்பாடு.

ஜனநாயக முறைப்படி நடைப்பெற்ற ஒரு வேட்பாளர் தேர்வுமுறைக்கு, ஊறு விளைவிக்கும் திரு. சி.கே. குமரவேல் அவர்கள் செயல்பட்டதால், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமை அவரின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்கிறது." என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News