பெண் குளிப்பதை செல்போனில் படம் பிடித்த வாலிபர் கைது!

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே இணையதள குற்ற வழக்கில் இளைஞர் கைது செய்யப்பட்டார்.  

Written by - RK Spark | Last Updated : Apr 4, 2023, 11:38 AM IST
  • பெண் குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபர்.
  • காவல்துறை கைது செய்து விசாரணை.
பெண் குளிப்பதை செல்போனில் படம் பிடித்த வாலிபர் கைது! title=

கோடங்குடி தெற்கு தெருவை சேர்ந்த சிவா லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சத்தியா. இவர் வீட்டு கொல்லை புறத்தில் குளிப்பது வழக்கம், இந்நிலையில் மாலை வழக்கம் போல் வீட்டின் கொல்லை புறத்தில் குளித்து கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | சென்னை மெரினாவில் பாணி பூரி சாப்பிட பெண் திடீர் மரணம்!

அப்போது எதார்த்தமாக திரும்பி பார்த்த போது பக்கத்து வீட்டில் குடியிருக்கும் கிருஷ்ணமூர்த்தி மகன் வசந்த் என்பவர் வீட்டு ஜன்னல் வழியாக குளித்துக் கொண்டிருப்பதை செல்போனில் படம் பிடித்து கொண்டிருப்பதை பார்த்துவிட்டு சத்தம் போடவே அருகில் இருந்த மாமியார் நிர்மலா மாமனார் மணிக்கண்ணன் வந்துவிட்டனர். 

அவர்களை பார்த்த உடன் ஜன்னலை விட்டு விலகி விட்டார் என‌ கூறப்படுகிறது. இது குறித்து சத்யா தா.பழூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வசந்தை கைது செய்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | மதுரை மாநகராட்சி மேயருக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் ஆர்பாட்டம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News