அதிமுக அணிகள் இணைப்பு: குழப்பத்தில் மக்கள்

Last Updated : Aug 19, 2017, 05:05 PM IST
அதிமுக அணிகள் இணைப்பு: குழப்பத்தில் மக்கள் title=

கடந்த சில மாதங்களாக அதிமுக அடுத்தடுத்து பல சஸ்பென்ஸ்களை மக்களுக்கு கொடுத்து வருகிறது. 

நேற்று அதிமுக அணிகள் இணைப்பு குறித்து பல பரபரப்பு சம்பவங்கள் நடத்து முடிந்த நிலையில் இன்று அணிகள் இணைப்பு குறித்து இன்று இரண்டாவது நாளாக ஆலோசனையில் ஈடுப்பட்ட பன்னீர்செல்வம் கூறியதாவது,

 

 

"அ.தி.மு.க. அணிகள் இணைப்பதை பற்றிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடந்து வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் நல்ல முடிவு எஎடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.

முன்னதாக இன்று தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன், டி.டி.வி தினகரன் ஆலோசனை செய்து வந்தார். இந்த கூட்டத்தில் அவரது ஆதரவு எம்எல்ஏ.க்கள் செந்தில் பாலாஜி, பழனியப்பன், சுப்பிரமணியம், சுந்தரராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அணிகள் இணைப்பு குறித்து நல்ல முடிவு வரும் என அதிமுக தொண்டர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ள நிலையில் தற்போது நடந்துவரும் இந்த சூழல் எத்தகு விளைவை ஏற்படுத்தும் என் புரியாமல் மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.

Trending News