#Sterlite: வாகனங்களுக்கு தீ வைத்ததாக மேலும் 6 பேர் கைது!!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின் போது வாகனங்களுக்கு தீ வைத்ததாக கூறி மக்கள் அதிகார அமைப்பை சேர்ந்த 6 பேரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது!!

Last Updated : Jun 11, 2018, 10:48 AM IST
#Sterlite: வாகனங்களுக்கு தீ வைத்ததாக மேலும் 6 பேர் கைது!! title=

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின் போது வாகனங்களுக்கு தீ வைத்ததாக கூறி மக்கள் அதிகார அமைப்பை சேர்ந்த 6 பேரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது!!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 22-ம் தேதி 100_வது நாளாக போரட்டம் நடைபெற்றது. இதனால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இதை தொடர்ந்து காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இந்தக் கலவரத்தில் போராட்டக்காரர்கள் சுமார் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், ஏராளமானோர் காயமடைந்தனர். 

இதை எதிர்த்து பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து, துப்பாக்கிசூடு விவகாரம் குறித்த விசாரணையை ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை செய்து வருகிறார்.இந்நிலையில், போராட்டத்தின் போது வாகனங்களுக்கு தீ வைத்ததாக கூறி  மக்கள் அதிகார அமைப்பை சேர்ந்த 6 பேரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ஏற்கனவே, மக்கள் அதிகார அமைப்பைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

 

Trending News