மக்களவை தேர்தலை தள்ளிவைக்கக்கோரி HC கிளையில் முறையீடு!!

மதுரையில் மக்களவை தேர்தலை தள்ளிவைக்கக்கோரி உயர்நீதிமன்றக்கிளையில் முறையீடு!!

Last Updated : Mar 11, 2019, 11:48 AM IST
மக்களவை தேர்தலை தள்ளிவைக்கக்கோரி HC கிளையில் முறையீடு!! title=

மதுரையில் மக்களவை தேர்தலை தள்ளிவைக்கக்கோரி உயர்நீதிமன்றக்கிளையில் முறையீடு!!

மக்களவை  தேர்தல் நடைபெறும் தேதி நேற்று மாலை தலைமை தேர்தல் அதிகாரி சுனில் ஆரோரா அறிவித்தார். அதன் படி இந்தியாவில் 7 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி, இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி, மூன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி, நான்காம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29 ஆம் தேதி, ஐந்தாம் கட்ட தேர்தல் மே 6 ஆம் தேதி, ஆறாம் கட்ட தேர்தல் மே 12 ஆம் தேதி, ஏழாம் கட்ட தேர்தல் மே 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.  

தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19 ஆம் தேதி தொடங்கி மார்ச் 26 ஆம் தேதி முடிவடைகிறது. மார்ச் 27 ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் இதற்கான தேர்தல் முடிவுகள் மே 23 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. 

இதை தொடர்ந்து, தமிழக தேர்தல் அன்று மதுரையில் சித்திரை தேர் திருவிழா நடைபெறுகிறது. சித்திரை திருவிழா தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று மதுரை மாவட்ட ஆட்சியருக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். விழா பற்றி தேர்தல் ஆணையத்துக்கு ஏற்கனவே தெரியப்படுத்தினீர்களா? எனவும் மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரி பதிலளிக்க, சத்யபிரதா சாஹூ உத்தரவிட்டுள்ளார். நாளைக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார். 

இந்நிலையில்  மதுரையில் மக்களவை தேர்தலை தள்ளிவைக்கக்கோரி உயர்நீதிமன்றக்கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. சித்திரை திருவிழாவை ஒட்டி மதுரையில் தேர்தலை ஒத்திவைக்கக்கோரி முறையீடு செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் பார்த்தசாரதி முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரணை என்று  உயர்நீதிமன்றக்கிளை தெரிவித்துள்ளது.

 

Trending News