தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம் தொடரும் என அறிவிப்பு

தனியார் தண்ணீர் லாரிகள் அமைப்புடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், வேலை நிறுத்தம் போராட்டம் தொடரும் என தனியார் லாரி உரிமையாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 21, 2019, 05:58 PM IST
தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம் தொடரும் என அறிவிப்பு title=

சென்னை: தனியார் தண்ணீர் லாரிகள் அமைப்புடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், வேலை நிறுத்தம் போராட்டம் தொடரும் என தனியார் லாரி உரிமையாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் அவதிக்கு உள்ளாகும் நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அனைத்துப் பகுதிகளுக்கும் பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யும் வேலையில் அரசு மற்றும் தனியார் லாரிகள் ஈடுபட்டு வருகின்றன. சுமார் 20,000-க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் மற்றும் டிராக்டர்களை செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் இன்று முதல் தனியார் தண்ணீர் லாரிகள் இயங்காது என தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரிகள் சங்கம் அறிவித்திருப்பது, பல மாவட்டங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என்று அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். 

இதுக்குறித்து பேசிய தமிழ்நாடு தனியார் தண்ணீர் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் முருகன், "தண்ணீர் டேங்கர் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் மீது போலீசார் பொய்யான வழக்குப்பதிவு செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எங்கள் ஓட்டுநர்கள் ஜாமீன் பெறாத பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்படுகிறார்கள். நிலத்தடி நீரை சட்டவிரோதமாக பிரித்தெடுப்பதாக மக்கள் குற்றம் சாட்டியதை அடுத்து, ஒரு டிரைவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். எங்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக நாங்கள் இதைச் செய்யவில்லை. குறிப்பாக பல தனியார் தண்ணீர் லாரிகள் மட்டுமே சிறைபிடிக்கப்படுகின்றன. இத்தகைய கடினமான சூழ்நிலைகளில் செயல்படுவது மிகவும் கடினம் என்று கூறினார் முருகன். 

அதேபோல தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் நிஜலிங்கம் செய்தியாளர்களிடம் கூறுகையில், அரசாங்கமும் காவல்துறையும் தங்கள் பணிக்கு ஒத்துழைக்கவில்லை. லாரிகளை சிறைபிடிப்பதும், லாரி உரிமையாளர்கள் மீது பொய்யாக திருட்டு வழக்குகள் பதிவு செய்வதும் போன்ற நடவடிக்கையில் போலீசார் ஈடுபடுகின்றனர். எங்களுக்கு உரிமம் வழங்குவது என்ற பெயரில், காவல்துறை மற்றும் அரசாங்கம் எங்கள் மீது வழக்குகள் பதிவு செய்கின்றன. இதை கண்டித்து தமிழகம் முழுவதும் வரும் 21 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம் என கடந்த சனிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

Trending News