பாஜகவில் இணைந்த ஓய்வு பெற்ற காவல் துறையினர்... காஞ்சீபுரத்தில் நடந்த நிகழ்ச்சி!

காஞ்சிபுரத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற மாற்றுக்கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணையும் விழாவில், 20க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற காவல் துறையினர் தங்களை பாஜக அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : Mar 10, 2024, 04:10 PM IST
  • பாரத பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்த இணைந்ததாக கருத்து தெரிவித்த மாற்று கட்சியினர்
  • நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட தலைவர்கள் நிர்வாகிகள்.
  • மாவட்ட தலைவர் கே.எஸ்.பாபு முன்னிலையில் இணைந்த ஓய்வு பெற்ற காவல் துறையினர்.
பாஜகவில் இணைந்த ஓய்வு பெற்ற காவல் துறையினர்... காஞ்சீபுரத்தில் நடந்த நிகழ்ச்சி! title=

எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து முன்னணி அரசியல் கட்சியினரும் புதிய உறுப்பினர்கள் சேர்த்தல், மாற்றுக்கட்சியினரை இணைத்தல்,பூத் கமிட்டி அமைத்தல் போன்ற பல்வேறு விதமான தேர்தல் பணிகளை மேற்கொண்டு தங்களது கட்சியினை பலப்படுத்தி வருகின்றனர்.

மாவட்ட தலைவர் கே.எஸ்.பாபு முன்னிலையில் இணைந்த மாற்றுகட்சியினர்

அந்தவகையில், காஞ்சிபுரத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற  மாற்றுக்கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணையும் விழாவில், 20க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற காவல் துறையினர் மற்றும் 200க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் மாவட்ட தலைவர் கே.எஸ்.பாபு முன்னிலையில் தங்களை பாஜக அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். 

பாரதீய ஜனதா கட்சியில் இணையும் விழா

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் பகுதியிலுள்ள ஓர் தனியார் திருமண மண்டபத்தில் காஞ்சிபுரம் மாவட்ட பாஜக சார்பில் மாற்றுக்கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் இணையும் விழா தாசரதி தலைமையில் அசோக், அருண்குமார், ஆனந்தன், செல்வம் ஆகியோர் ஏற்பாட்டில் பாரதிய ஜனதா கட்சியில் இணையும் விழா நடைபெற்றது.

பாஜகவில் இணைந்த ஓய்வு பெற்ற காவல் துறையினர்

இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மாவட்ட பாஜக தலைவர் கே.எஸ்.பாபு முன்னிலையில் 
காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற காவல் துறையினரும், அதே போல் மாற்றுக்கட்சியிலிருந்து விலகிய சுமார் 200க்கும் மேற்பட்டோர் தங்களை பாரதிய ஜனதா கட்சியில் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டு, பாஜகவின் உறுப்பினர் அட்டையை பெற்றுக் கொண்டனர்.

மேலும் படிக்க | திமுக கூட்டணி இறுதியானது... காங்கிரஸ் கட்சிக்கு 10 இடம் - அடுத்தது என்ன?

பாரத பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்த இணைந்ததாக கருத்து தெரிவித்த மாற்று கட்சியினர்

அதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார்பாளையம் 30வது வார்டு மடம் தெரு பகுதியில் கார்த்திக் தலைமையில் 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தலைவர் கே.எஸ்.பாபு முன்னிலையில் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர். பாரத பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்தவும், பாஜகவின் வளர்ச்சிக்கும்,தொடர்ந்து மக்கள் நல பணிகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதற்காக தங்களை பாஜகவில் இணைத்துக் கொள்வதாகவும் பாஜகவில் இணைந்தவர்கள் தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட தலைவர்கள் நிர்வாகிகள்

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொது செயலாளர்கள் வாசன், ருத்ரகுமார், மாவட்ட துணைத்தலைவர் ராஜகுமாரி, ஜம்போடை சங்கர், எல்லம்மாள், பிரபுராஜ், மாவட்ட செயலாளர்கள் செந்தில், தனபால், டிஜிட்டல் ஸ்ரீதர், ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் அதிசயம் ப.குமார், மண்டல தலைவர்கள் (மேற்கு) ஜீவானந்தம், (கிழக்கு) ஞானசூரியன், கலை மற்றும் கலாச்சார பிரிவு மாவட்ட தலைவர் ஆக்டர் குமார்,அரசு தொடர்பு மாவட்ட துணைத் தலைவர் ஆர்.வெங்கடேசன், மாநில செயலாளர் கூட்டுறவு பிரிவு லட்சுமிநாராயணன் மற்றும் பாஜக மாவட்ட, மாநகர, ஒன்றிய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க | கமல்ஹாசனுக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது - அண்ணாமலை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News