ஆர்கேநகர் இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி மனு தாக்கல்

Last Updated : Mar 22, 2017, 04:25 PM IST
ஆர்கேநகர் இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி மனு தாக்கல் title=

ஆர்கேநகர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

கடந்த 22 நாட்களாக நெடுவாசலில் போராட்டம் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள், மாணவர்களின் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதை கருதி தற்போது போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. 

இதற்கான வேட்புமனுத்தாக்கல் நாளையுடன் முடிவு அடையும் நிலையில் அனைத்து கட்சிகளும் வேட்பாளர் தேர்வில் தீவிரம் காட்டி வருகின்றன. 

இதையடுத்து எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கிய தீபா, ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். இன்று ஆர்கே.நகரில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் அறிவித்திருந்தார். 

இந்நிலையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம் இன்று சீமானுடன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

 

 

Trending News