தென்னிந்திய தாவூத் இப்ராஹிம் கம்போடியாவில் தற்கொலை!

Last Updated : Oct 5, 2017, 11:52 AM IST
தென்னிந்திய தாவூத் இப்ராஹிம் கம்போடியாவில் தற்கொலை! title=

பல்வேறு குற்றவியல் வழக்குகளில் தொடர்புடைய பிரபல தாதா ஸ்ரீதர் தனபால் நேற்று மாலை 6.30 அளவில் கம்போடியாவில் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளன.

தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர் தனபால்(46). ஆள் கடத்தல், கொலை மிரட்டல், என 45-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்த நிலையில் இவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார்.

வெளிநாடுகளில் இருந்தபடியே தன் செயல்பாடுகளை இவர் செயல்படுத்தி வந்த நிலையில் அமலாக்கத்துறை இவருடைய பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியது.

ஸ்ரீதரை தனபாலை பிடிக்க அமலாக்கத் துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்த நிலையில் நேற்று மாலை இவர் கம்போடியாவில் சயனைடு அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Trending News