தமிழக விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்திய திடீர் மழை!

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களில் பரவலாக மழை பொழிந்தது!

Last Updated : Aug 3, 2018, 10:12 AM IST
தமிழக விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்திய திடீர் மழை! title=

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களில் பரவலாக மழை பொழிந்தது!

சென்னை, காஞ்சிபுரத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை திடீர் மழை பொழிந்தது. நகரப் பகுதியில் மட்டுமின்றி, சுற்றுவட்டாரப் பகுதிகளான ஓரிக்கை, வேடல், செவிலிமேடு, பூக்கடைச் சத்திரம், உத்திரமேரூர், வாலாஜாபாத், சுங்குவார்சத்திரம் ஆகிய இடங்களிலும் கனமழை பெய்தது. 

தீடீரென பொழிந்து மழையால் விவசாய பெருமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

தென்மாவட்டங்களில் நேற்று இரவு சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால், விவசாய மக்கள் சம்பா சாகுபடி பணிகளை தொடங்கியுள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்  மற்றும் சுற்றுவட்டாரங்களில் கடும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், திடீர் கனமழை பெய்ததால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். 

மேலும் தண்ணீர் வேண்டி காத்திருந்த மானாவரி பயிர்கள் செழிக்க இந்த மழை உதவும் என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Trending News