பரபரபப்பு!! டெல்லியில் தமிழக விவசாயிகள் தற்கொலை முயற்ச்சி

Last Updated : Sep 30, 2017, 09:51 AM IST
பரபரபப்பு!! டெல்லியில் தமிழக விவசாயிகள் தற்கொலை முயற்ச்சி title=

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும், விளை பொருட்களுக்கு நியாயமான விலை வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் இரண்டாவது கட்டமாக டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் 77_வது நாளாக போராடி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி கொண்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றனர். இதனால் போராட்டம் நடத்தி வரும் ஜந்தர் மந்தரில் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தற்கொலைக்கு முயன்ற விவசாயிகளை டெல்லி போலீசார் கைது செய்தனர். 

ஆனாலும் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை எங்கள் போராட்டம் ஓயாது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Trending News