மீனாட்சியம்மன் கோவிலுக்குள் செல்போன் பயன்பாட்டிற்கு இன்று முதல் தடை!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் செல்போன் கொண்டு விதித்த தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

Last Updated : Mar 3, 2018, 08:00 AM IST
மீனாட்சியம்மன் கோவிலுக்குள் செல்போன் பயன்பாட்டிற்கு இன்று முதல் தடை! title=

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் செல்போன் கொண்டு விதித்த தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் மார்ச் 3-ம் தேதி முதல் செல்போன் எடுத்து வர தடைவிதித்து கோயில் நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது.

கடந்த 2ம் தேதி இரவு 11:30 மணி அளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த 30-ம் மேற்பட்ட கடைகள் தீயினால் பாதிக்கப்பட்டது.

எனவே, மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் மீனாட்சி கோயிலில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். தீவிபத்திற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர் மட்ட குழு அமைக்க வேண்டும் எனக்கூறினார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைகிளை, மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் பொதுமக்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் தவிர வேறு யாரும் கோவிலுக்குள் செல்போன் எடுத்த செல்லக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று, மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் சார்பில் ஒர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில், மார்ச் 3-ம் தேதி முதல் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் செல்போன் எடுத்துவர அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவ்வாறு செல்போன் எடுத்து வருபவர்கள் வடக்கு, கிழக்கு வாசலில் உள்ள பாதுகாப்பு அறையில் ஒப்படைத்துவிட்டு வரலாம். அவ்வாறு ஒப்படைக்கும் போது அதற்கு தனியாக கட்டணம் வசூலிக்கப்படும்.

வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய வரும்போது, தங்களின் ஹோட்டல் அறையிலேயே மொபைல் போன்களை வைத்துவிட்டு வர வேண்டும் அல்லது, பாதுகாப்பு அறையில் ஒப்படைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை தொடர்ந்து, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் செல்போன் எடுத்துச் செல்ல விதித்த தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது. மேற்கு மற்றும் வடக்கு கோபுர வாசல் அருகே செல்போன் பாதுகாப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது.

Trending News