சென்னை அண்ணா சாலையில் திடீர் பள்ளம்!!

Last Updated : Mar 30, 2017, 11:05 AM IST
சென்னை அண்ணா சாலையில் திடீர் பள்ளம்!! title=

சென்னை அண்ணா சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அமெரிக்க தூதரகம் மற்றும் சர்ச் பார்க் பள்ளிக்கு இடையே ஏற்பட்ட இந்த பள்ளத்திற்கு காரணம் தெரியாமல் மக்கள் அச்சமடைந்தனர். 

பிறகு, மெட்ரோ ரெயில் பணிகளின் தாக்கத்தால் சிமெண்ட் கலவை கசிவால்  இந்த பள்ளம் ஏற்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதனால், அண்ணா சாலை முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து போலீஸார் சம்பவ பகுதிக்கு விரைந்து போக்குவரத்தை சீர்படுத்தி வருகின்றனர்.

Trending News