பாஜகவை அகில இந்திய அளவில் தனிமை படுத்த வேண்டும்: தொல் திருமாவளவன்

மாவீரன் தாத்தா ரெட்டமலை சீனிவாசன் அவர்களின் 77வது நினைவு நாளை முன்னிட்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல் திருமாவளவன் வீரவணக்கம் செலுத்தினார். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 18, 2022, 02:01 PM IST
  • சனாதன சக்திகளை தனிமை படுத்துவது ஒன்றுதான் இந்தியாவையும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும் பாதுகாக்க ஒரே வழி.
  • ஆராசா பேசியதாக திரித்து திரிபு வாதம் செய்கிறார்கள்.
  • இந்து மக்கள் சனாதான சக்திகளின் சூது சூழ்ச்சிக்கு இறையாகி விடக்கூடாது.
பாஜகவை அகில இந்திய அளவில் தனிமை படுத்த வேண்டும்: தொல் திருமாவளவன்  title=

மாவீரன் தாத்தா ரெட்டமலை சீனிவாசன் அவர்களின் 77வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை ஓட்டேரியில் உள்ள அவரது நினைவிடமான உரிமை களத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல் திருமாவளவன் தலைமையில் பேரணியாக சென்று மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தொல் திருமாவளவன்,  சனாதனத்தை வேரறுக்க போராடிய கருத்தியல் போராளி தாத்தா ரெட்டமலை சீனிவாசன் நினைவு நாளில் இந்தியாவை சூழ்ந்துள்ள சனாதனத்தை கோலாச்ச துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் பாஜகவை அகில இந்திய அளவில் தனிமை படுத்த வேண்டும். அவர்களோடு அரசியல் காரணங்களுக்காக கூட்டணி வைப்பது நாட்டு மக்களுக்கு செய்கின்ற துரோகம் என்றார். பாஜக ஆர் எஸ் எஸ் உள்ளிட்ட சனாதன சக்திகளை தனிமை படுத்துவது ஒன்றுதான் இந்தியாவையும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும் பாதுகாக்க ஒரே வழி எனவும் கூறினார்.

சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் பள்ளி குழந்தைகள் இடையே தீண்டாமையை கடைபிடித்த விகாரத்தில் ஒருவர் மட்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்றாலும் ஊர் கட்டுப்பாடு என்று முடிவு செய்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது எனவும் தொல் திருமாவளவன்  கூறினார்.

மேலும் படிக்க | நிறைமாத கர்ப்பிணியை அலைகழித்த அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு அரசு அதிகாரி எச்சரிக்கை

இந்துக்கள் குறித்து ஆராசா பேசியதாக திரித்து திரிபு வாதம் செய்கிறார்கள் அவர் யாரையும் குறிப்பிட்டு புண்படுத்தும் நோக்கில் பேசவில்லை. மனுஸ்மிரிதியில் உள்ளதை, பெரியார் பேசியதை, அம்பேத்கர் பேசியதை தான் மேற்கோள் காட்டி  ஆ ராசா பேசியிருக்கிறார். சனாதன சக்திகள் மனுஸ்மிரிதியை பாதுகாக்க அவர் பேசியதை திசை திருப்புகிறார்கள். ஆகவே இந்து மக்கள் சனாதான சக்திகளின் சூது சூழ்ச்சிக்கு இறையாகி விடக்கூடாது. இளைய தலைமுறையினருக்கு தவறான தகவல்களை பரப்புகின்றனர் பிழை செய்வது அவர்கள் தான் நாங்கள் அல்ல எனவும் தொல் திருமாவளவன்  கூறினார்.

மேலும் படிக்க | மக்களின் பிரச்னையை பிக்பாஸில் தீர்க்கலாம் என நினைக்கக்கூடாது - கமலை வறுத்தெடுக்கும் வானதி

மேலும் படிக்க | 'லஞ்ச ஒழிப்புத்துறை அதன் கடமையை தான் செய்கிறது' - ஓபிஎஸ் கொடுத்த ஷாக்

மேலும் படிக்க | இந்தியா முழுவதும் ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்க வேண்டிய தேவை இருக்கிறது: தொல் திருமாவளவன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News