முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிலைக்கும் இனி மரியாதை செலுத்தப்படும்: தமிழக அரசு

ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் சிலைக்கும் மரியாதை செலுத்தப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Shiva Murugesan | Last Updated : Feb 4, 2022, 07:15 PM IST
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிலைக்கும் இனி மரியாதை செலுத்தப்படும்: தமிழக அரசு title=

சென்னை: அதிமுக ஆட்சியில் செய்யப்பட்டது போன்றே திமுக ஆட்சியிலும் ஒவ்வொரு ஆண்டும் ஜெயலலிதா சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செய்யப்படும் மற்றும் உயர்கல்வித்துறையில் இருந்த பொறுப்பை செய்தி மக்கள் தொடர்பு துறைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு அரசாணை.

அதாவது சென்னை உயர்கல்வி மன்ற வளாகத்தில் அமைந்துள்ள செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் சிலை பராமரிக்கும் நிர்வாகப் பொறுப்பு உயர்கல்வி துறையிலிருந்து மாற்றப்பட்டு இயக்குநர் செய்தி மக்கள் தொடர்புத்துறை அவர்களுக்கு வழங்கப்படுவதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதில் ஆண்டு தோறும் மற்ற தலைவர்களின் சிலைகளுக்கு அவர்களின் பிறந்த தினத்தன்று மாலை அணிவித்து அரசின் சார்பில் மரியாதை செய்யப்படுவதை போன்று ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் சிலைக்கும் மேற்கொள்ளப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 

former chief minister jayalalithaa's statue

 

jayalalithaa's statue in Tamil Nadu

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News