நடப்பாண்டு முதல் பிளஸ் +1-க்கு பொதுத் தேர்வு; மதிப்பெண்கள் 600ஆக குறைப்பு- செங்கோட்டையன்

Last Updated : May 23, 2017, 07:56 PM IST
நடப்பாண்டு முதல் பிளஸ் +1-க்கு பொதுத் தேர்வு; மதிப்பெண்கள் 600ஆக குறைப்பு- செங்கோட்டையன் title=

நடப்பாண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்றும், 200 மதிப்பெண்கள் என்பதை 600 ஆக குறைக்கப்படும் என பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

பிறகு செய்தியாளர்களிடம் செங்கோட்டையன் கூறியதாவது:-

மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு நிகராக தமிழக பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும். நடப்பாண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும். அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

11 மற்றும் 12-ம் வகுப்புகளில் 1200 மதிப்பெண்கள், 600 மதிப்பெண்களாக குறைக்கப்படும். தேர்தல் நேரம் மூன்றிலிருந்து இரண்டரை மணி நேரமாக குறைக்கப்பட உள்ளது.

2018ம் ஆண்டில் 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்பு பாடத் திட்டங்கள மாற்றப்படும். 2019-ம் ஆண்டில் 2, 7, 10 மற்றும் 12-ம் வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படும். 2020-ம் ஆண்டில் 3, 4, 5 மற்றும் 8-ம் வகுப்பு பதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படும்.

11-ம் வகுப்பில் தோல்வி அடையும் மாணவர்கள் தொடர்ந்து 12-ம் வகுப்பில் படிப்பார்கள். 11-ம் வகுப்பில் தோல்வி அடைந்த பாடங்களுக்கு, ஜூன், ஜூலை மாதத்தில் நடைபெறும் இடைத்தேர்வில் எழுதலாம்.

ஒவ்வொரு பாடத்திற்கும் எழுத்துத் தேர்வு 90 மதிப்பெண்கள், அகமதிப்பீடு 10 மதிப்பெண்கள் என தேர்வு முறையில் மாற்றம் செய்யப்படும். ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பள்ளி வேலை நாட்களில் மாணவர்களுக்கு 1 மணி நேரம் பயிற்சியும், சனிக் கிழமைகளில் 3 மணி நேரம் பயிற்சியும் வழங்கப்படும்.

மாணவர்களுக்கு சிறப்பு கையேடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்கப்படும். நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

சிறந்த மாணவர்களை உருவாக்கவே பொதுத் தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட உள்ளது என அவர் கூறினார்.

Trending News