மகன் கண்முன்னே எரித்துக்கொல்லப்பட்ட கர்ப்பிணி! கணவன் வெறிச்செயல்! என்ன நடந்தது?

மறைமலைநகர் அருகே வேலைக்கு செல்லாமல் மது அருந்தி வந்த கணவனிடம் கேள்வி கேட்ட கர்ப்பிணி மனைவி கொடூரமாக எரித்து கொல்லப்பட்டுள்ளார். அதுவும் மகன் கண்முன்னே இந்த சம்பவம் நடந்துள்ளது. 

Written by - Bhuvaneshwari P S | Edited by - S.Karthikeyan | Last Updated : Oct 14, 2023, 02:42 PM IST
  • குடிபோதை கணவனின் வெறிச் செயல்
  • மனைவியை தீவைத்து எரித்த கொடூரம்
  • மகன் கண்முன்னே நடந்த சோகம்
மகன் கண்முன்னே எரித்துக்கொல்லப்பட்ட கர்ப்பிணி! கணவன் வெறிச்செயல்! என்ன நடந்தது? title=

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரை அடுத்த கோவிந்தாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவர் பெயிண்டராக உள்ளார். கடந்த 7 வருடங்களுக்கு முன்பு சென்னை மணலியைச் சேர்ந்த நந்தினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளார். தற்போது இரண்டாவது முறையாக நந்தினி கர்ப்பமாக உள்ளார். 4 மாத கர்ப்பிணியான அவரிடம் குடித்துவிட்டு அடிக்கடி சண்டை போடு வந்துள்ளார் ராஜசேகர்.   

அதோடு அவர் வேலைக்கு செல்லாமல் குடிபோதையில் எப்போதும் இருந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. இந்நிலையில், வழக்கம் போல நேற்று மதியம் ராஜசேகர் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் நந்தினி தனது கணவரிடம் அடிக்கடி நீ குடித்துவிட்டு வந்தால் மண்ணென்னெய் ஊற்றி தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டி உள்ளார். 

மேலும் படிக்க | என்ன பிசுபிசுனு இருக்கு? மாத்திரையா இது? அரசு மருத்துவமனையின் அவல நிலை!

முழு  போதையில் இருந்த ராஜசேகர், நீ என்ன தற்கொலை செய்து கொள்வது, நானே உன்னை எரித்து கொன்று விடுகிறேன் எனக் கூறி வீட்டில் இருந்த மண்ணென்ணெயை எடுத்து நந்தினி மேல் ஊற்றி தீவைத்து எரித்துள்ளார்.  நந்தினியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கர்ப்பிணியான நந்தினி என்ன நடக்கிறது என்பதை அறிவதற்குள் எரிக்கப்பட்டுள்ளார். 

இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது தீக்காயத்தால் துடித்த அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், நந்தினி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் கொடுமை என்ன வென்றால் மகன் கண்முன்னே தனது மனைவியை ராஜசேகர் எரித்துக்கொன்றது தான். மனைவி அலற தொடங்கியதும் மகனை தூக்கிக்கொண்டு ராஜசேகர் ஓடிவிட்டார்.  அதன் பின் தப்பியோடிய ராஜசேகரை மறைமலைநகர் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  கர்ப்பிணிக்கு நடந்த இந்த கொடுமை அப்பகுதி மக்களை கண்கலங்க செய்துள்ளது.

மேலும் படிக்க | அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1000 வழங்கக்கோரி பாஜக போராட்டம்-அண்ணாமலை அறிவிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News