பள்ளி மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் பரபரப்பு வீடியோ!

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள புனித ஜான் பள்ளியின் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட காட்சி வெளியாகியுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 2, 2021, 10:15 AM IST
பள்ளி மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் பரபரப்பு வீடியோ! title=

தற்போது கொரோனா இரண்டாம் அலை சற்று குறைந்து தமிழகம் முழுவதும் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.  மாணவர்கள் அவரவர் விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு வந்து சென்று கொண்டிருக்கின்றனர்.  நவம்பர் 1ம் தேதி முதல் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகளை திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள புனித ஜான் பள்ளியின் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது.  இரு தரப்பு மாணவர்கள் ஒருவரையொருவர் மிகவும் மோசமாக அடித்துக் கொள்கின்ற.   இரண்டு நாட்களாக தொடர்ந்து மாணவர்கள் மோதலில் ஈடுபடுவதாக சொல்லப்படுகிறது.  இரு தரப்பு மாணவர்கள் அடித்து சண்டை போட்டு கொண்டிருப்பதை மற்றவர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருக்கின்றனர்.

பள்ளியில் சுமார் 200 மாணவர்கள் இந்த பள்ளியில் படிக்கின்றனர்.   துணை ஆணையர் நேரில் வந்து மாணர்வளிடையே சமரசம் செய்து அனுப்பி வைத்தார்.  ஜாதி ரீதியான மோதலாக இருக்குமா என்ற கோணத்தில் தற்போது விசாரணை நடக்கிறது.

 

ALSO READ 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு திங்கள் முதல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News