அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவரா நீங்கள்? இனி ஸ்விக்கியில் ஆர்டர் செய்து கொள்ளலாம்!

IRCTC: உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஸ்விக்கி தற்போது இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசியின் இரயில்களில் பயணிகளுக்கு உணவை டெலிவரி செய்ய இணைந்துள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Feb 26, 2024, 07:51 AM IST
  • இனி ரயிலிலும் ஸ்விக்கி.
  • முன்கூட்டியே ஆர்டர் செய்து கொள்ளலாம்.
  • ஐஆர்சிடிசியின் இணைந்து சேவையை வழங்க உள்ளது.
அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவரா நீங்கள்? இனி ஸ்விக்கியில் ஆர்டர் செய்து கொள்ளலாம்! title=

இந்திய ரயில்வேயில் நாளுக்கு நாள் புதிய அப்டேட்கள் வந்து கொண்டுள்ளது.  பயணிகளின் பாதுகாப்பிற்காக பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.  இந்நிலையில், இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசியின் இ-கேட்டரிங் போர்டல் மூலம் பயணிகள் இனி தங்களுக்கு தேவையான உணவை முன்கூட்டிய ஆர்டர் செய்து கொள்ளலாம். இதற்காக இந்தியாவின் முன்னணி உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி இந்திய ரயில்வேயுடன் கூட்டணி சேர்ந்துள்ளது.  நீண்ட தூர ரயில் பயணத்தில் பயணிகள் தங்களுக்கு பிடித்த உணவு சாப்பிடுவதற்காக இந்த சேவை கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  விரைவில் இந்த சேவை ரயில்களில் அமல்படுத்தப்பட உள்ளது.

மேலும் படிக்க | பிளிப்கார்டில் Vivo V30... அடுக்கி நிற்கும் சிறப்பம்சங்கள் - விலை என்னவாக இருக்கும்?

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) உடன் இணைந்து, இ-கேட்டரிங் போர்ட்டல் மூலம் பயணிகளுக்கு உணவை வழங்க உள்ளது ஸ்விக்கி. இந்த சேவையானது முதற்கட்டமாக பெங்களூரு, புவனேஸ்வர், விஜயவாடா மற்றும் விசாகப்பட்டினம் போன்ற முக்கியமான ரயில் நிலையங்களில் அமல்படுத்தப்பட உள்ளது. “பண்ட்ல் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் மூலம் ஈகேடரிங் சேவை விரைவில் கிடைக்கக்கூடும்” என்று IRCTC தெரிவித்துள்ளது. ரயில் பயணத்தின் போது விருப்பமான உணவை பயணிகள் சாப்பிட, பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்துவதே இதன் நோக்கமாக உள்ளது.  ஸ்விக்கியுடன் இந்த புதிய கூட்டணி, ஐஆர்சிடிசி தனது இ-கேட்டரிங் தளத்தைப் பயணிகளுக்கான உணவு ஆர்டர் மற்றும் டெலிவரி செயல்முறையை ஒழுங்குபடுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.

“ஐஆர்சிடிசி ஆனது பண்டல் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்துள்ளது இ-கேட்டரிங் போர்ட்டல் மூலம் உணவுகளை வழங்குவதற்கும் டெலிவரி செய்வதற்கும் முதல் கட்டமாக பெங்களூரு, புவனேஸ்வர், விஜயவாடா மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய நான்கு ரயில் நிலையங்களில் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது” என்று ஐஆர்சிடிசி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களுடன் ஐஆர்சிடிசி கூட்டு சேர்வது இது முதல் முறை இல்ல.  கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் டெல்லி, பிரயாக்ராஜ், கான்பூர், லக்னோ மற்றும் வாரணாசி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் இதேபோன்ற சேவையை Zomato செய்து வருகிறது.

எப்படி ஆர்டர் செய்வது?

ஐஆர்சிடிசி இ-கேட்டரிங் போர்ட்டல் மூலம், ரயில் பயணத்திற்கான உணவை முன்கூட்டிய ஆர்டர் செய்வது எளிமையான செயல் ஆகும். பயணிகள் தங்கள் பயணத்தில் என்ன உணவு வேண்டும் என்பதை தீர்மானிக்க அவர்களின் PNR எண்ணை உள்ளிட வேண்டும். தங்களுக்கு தேவையான உணவை தேர்வு செய்தவுடன், ஆன்லைனில் பணம் அனுப்பலாம் அல்லது டெலிவரி செய்யும் போது பணத்தை கொடுக்கலாம். ஸ்விக்கியில் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகள் பயணிகளின் இருக்கைகளுக்கு நேரடியாக கொண்டுவரப்படும். இது அவர்களின் பயண அனுபவத்தின் வசதியை இன்னும் மேம்படுத்தும். 

மேலும் படிக்க | நமது வீட்டில் உள்ள பிரிஜ்ட்ஜை சுத்தம் செய்வது எப்படி? எளிதான வழிகள் இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News