அணுசக்தியால் பேரழிவு... அதுவும் இந்த ஆண்டே - பாபா வாங்காவின் கணிப்பு!

Baba Vanga Prediction: 2023ஆம் ஆண்டில் ஒரு பெரிய அணுமின் நிலைய வெடிப்பைப் பற்றி பாபா வாங்கா எச்சரித்ததாகக் கூறுகின்றனர், இது ஆசியாவில் பெரும் பிரளயத்தை உண்டாக்கும் எனவும் கூறுகின்றனர்.

Written by - Sudharsan G | Last Updated : Jun 8, 2023, 09:48 PM IST
  • பாபா வாங்கா கடந்த 1996இல் உயிரிழந்தார் என தெரிவிக்கப்படுகிறது.
  • இளவரசி டயானாவின் மரணம் உள்ளிட்ட பல விஷயத்தை இவர் கணித்துள்ளார்.
  • கடுமையான நோய் பரவுவதற்கு வழிவகுக்கும் என்றும் பாபா வாங்கா கணித்துள்ளார்.
அணுசக்தியால் பேரழிவு... அதுவும் இந்த ஆண்டே - பாபா வாங்காவின் கணிப்பு! title=

Baba Vanga Prediction: 2023ஆம் ஆண்டு முடிவதற்குள், ஒரு அணுசக்தி பேரழிவு உலகின் கணித்ததாக கூறப்படும் பார்வை திறனற்ற ஆன்மீகவாதி பாபா வங்கா கணித்ததாகக் கூறப்படுகிறது. பல்கேரிய பெண்ணான பாபா வாங்கா பல ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். 

ஆனால் அவரது பல கணிப்புகள் அவரது மரணத்திற்குப் பிறகு உண்மையாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.  அவரின் உண்மையான பெயர் வான்ஜெலியா பாண்டேவா டிமிட்ரோவா. ஒரு பெரிய புயலின் போது 12 வயதில் மர்மமான முறையில் கண்பார்வை இழந்தார் என கூறப்படுகிறது. சில நாட்களுக்குப் பிறகு அவரது குடும்பத்தினர் அவளைக் கண்டுபிடித்தபோது, ​​அவர் தனது முதல் கணிப்புகளை பற்றி அவர்களிடம் கூறினார் என தெரிவிக்கப்படுகிறது.

இப்போது, அவரைப் பின்பற்றுபவர்களில் சிலர், 2023ஆம் ஆண்டில் ஒரு பெரிய அணுமின் நிலைய வெடிப்பைப் பற்றி பாபா வாங்கா எச்சரித்ததாகக் கூறுகின்றனர், இது ஆசியாவில் பெரும் பிரளயத்தை உண்டாக்கும் எனவும் கூறுகின்றனர். 

மேலும் படிக்க | இந்தியாவின் முதல் சர்வதேச கப்பல் சேவை! சென்னை-இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து தொடங்கியது

இந்த வெடிப்பினால் மற்ற நாடுகளும் பாதிக்கப்படும் என்றும், இது கடுமையான நோய் பரவுவதற்கு வழிவகுக்கும் என்றும் பாபா வாங்காவை பின்தொடர்பவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பாபா வாங்காவின் கணிப்புகளாக கூறப்படுவது அனைத்தும் நடந்துவிட்டதாக கூற முடியாது. இருப்பினும், இவற்றில் பல பரவலாகப் புகாரளிக்கப்படுகின்றன. கணிப்புகள் ஒரு வினோதமான முறையீட்டைக் கொடுக்கும். 

2023 ஆம் ஆண்டிற்கான பல கணிப்புகள் குறித்து பல தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இது 2023ஆம் ஆண்டிற்கான முதல் கணிப்பு பூமியின் சுற்றுப்பாதையில் ஏற்பட்ட மாற்றத்தைப் பற்றி பேசுகிறது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளில் சிறிதளவு நடக்கும் விளிம்பு மாற்றத்தை விட வியத்தகு மாற்றமாகும்.

2023 ஆம் ஆண்டில் பூமியின் காலநிலையை பாதிக்கும் சக்திவாய்ந்த சூரிய புயல் குறித்து பாபா வங்கா கணித்துள்ளதாகவும் நம்பப்படுகிறது. இந்த ஆண்டு ஒரு வல்லரசு ஒரு அணு ஆயுதத்தைப் பயன்படுத்துவதைப் பற்றி பாபா வங்கா கூறுவது மிகவும் ஆபத்தான மற்றும் சரிபார்க்கப்படாத  கணிப்புகளில் ஒன்றாகும். இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

பாபா வாங்கா 1996இல் தனது 75 வயதில் உயரிழந்தார். ஆனால் அவர் தனது வாழ்நாளில் தொற்றுநோய், இளவரசி டயானாவின் மரணம் மற்றும் செர்னோபில் பேரழிவை முன்னாடியே கணித்ததாக கூறப்படுகிறது. உலகின் முதல் 'செயற்கை கருப்பை வசதி', Ectolife குறித்து இந்த நாட்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பான வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நுட்பத்தின் மூலம் குழந்தைகளைப் பெற்றெடுக்க தாயின் கருவறை தேவைப்படாது. இந்த செயற்கை கருப்பை உண்மையாகி விட்டால், 2023-ம் ஆண்டு குறித்த பாபா வெங்காவின் கணிப்பு சரியாகி விடும். இந்த நுட்பத்தின் மூலம் சில காரணங்களால் கருப்பை அகற்றப்பட்ட பெண்கள் கூட தாயாகலாம். இது தவிர, குழந்தை பெற இயலாத தம்பதிகள்கூட குழந்தைகளை பெற்றெடுக்க முடியும்.

மேலும் படிக்க | Pakistan: பொருளாதார சிக்கலின் உச்சம்! சொத்தை மூன்றாண்டு குத்தகைக்கு விட்ட பாகிஸ்தான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News