பிரிட்டனில் புதிய சகாப்தம் தொடங்கியது: நாணயங்களில் ஏற்படும் மாற்றம்

Coin Of Britain: இனி இங்கிலாந்தில் தயாரிக்கப்படும் நாணயங்களில் மூன்றாம் சார்லஸ் மன்னரின் உத்தியோகபூர்வமான உருவமும் பொறிக்கபடும்... புதிய சகாப்தம் தொடங்கியது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 30, 2022, 08:36 AM IST
  • புதிய பிரிட்டன் நாணயங்களில் மறைந்த இரண்டாம் எலிசபெத் ராணியுடன் புதிய அரசரும் இருப்பார்
  • இனி இங்கிலாந்தில் தயாரிக்கப்படும் நாணயங்களில் மூன்றாம் சார்லஸ் மன்னர் இடம் பெறுவார்
  • புதிய சகாப்தம் தொடங்கியது
பிரிட்டனில் புதிய சகாப்தம் தொடங்கியது: நாணயங்களில் ஏற்படும் மாற்றம் title=

Coin Of Britain: இனி இங்கிலாந்தில் தயாரிக்கப்படும் நாணயங்களில் மூன்றாம் சார்லஸ் மன்னரின் உத்தியோகபூர்வமான உருவமும் பொறிக்கபடும்... புதிய சகாப்தம் தொடங்கியது என்பதை குறிக்கும் குறியீடாக இது பார்க்கப்படுகிறது. 70 ஆண்டுகளாக பிரிட்டனின் மகாராணியாக மகுடம் சூடிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்குப் பிறகு, நாட்டில் ஏற்படும் மாற்றங்களின் புதிய உத்தியோகபூர்வ வெளிப்பாடு இது. பிரிட்டன் அரசராக ஆல்ஃபிரட் தி கிரேட் இருந்த காலத்தில் இருந்து, அரச குடும்பத்தின் உருவங்களைக் கொண்ட நாணயங்களைத் தயாரிக்கும் பொறுப்பை ராயல் மிண்ட் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இது ஒரு புதிய சகாப்தத்தின் ஆரம்பம் என்று சொல்லும் அந்த நிறுவனம், மூன்றாம் சார்லஸ் மன்னரின் உத்தியோகபூர்வமான உருவத்துடன் புதிய நாணயங்கள் உருவாக்கப்படும், புதிய அரசரின் உருவம், அவர் அரியணைக்கு வந்த பிறகு நாணயங்களில் பயன்படுத்தப்படும் பாரம்பரியம் தொடர்வதாக பிரிட்டனின் ராயல் மிண்ட் இன்று (வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 30) ​​தெரிவித்தது.

ராயல் மின்ட், வெளியிட்ட ஒரு அறிக்கையில், வரவிருக்கும் மாதங்களில் பிரிட்டனில் ராஜாவின் உருவம் உள்ள் நாணயங்கள் அச்சிடப்படும் என்று கூறியது.

மேலும் படிக்க | எலிசபெத் ராணியின் மரணத்திற்கு பின் கோஹினூர் வைரம் இனி யாரிடம் செல்லும்?

தற்போது இருக்கும் நாணயத்தை பிரிட்டிஷ் சிற்பி மார்ட்டின் ஜென்னிங்ஸ் உருவாக்கினார். இதற்கு அன்றைய மன்னரின் தனிப்பட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டது. ஜென்னிங்ஸ் ராஜாவின் புகைப்படத்தின் மாதிரியில் அரசரின் உருவம் பொறிக்கப்படும். 

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் வாழ்க்கையை போற்றும் வகையில் £5 மற்றும் 50 பென்ஸ் மதிப்புள்ள தனித்துவமான மற்றும் சிறப்பு வாய்ந்த நாணயங்கள் அரசரின் உருவத்துடன் கூடிய முதல் நாணயங்களாக வெளியிடப்படும். ராணியின் இரண்டு புதிய பிராண்ட் படங்கள் நினைவு நாணயத்தின் பின்புறத்தில் இருக்கும்.

இந்த நாணயங்கள் தான் இதுவரை தயாரித்தவற்றில் மிகச் சிறியவைகளாக இருக்கும் என்றும் நாணய வடிவமைப்பாளர் கூறுகிறார். ஆனால் தலைமுறை தலைமுறையாக மக்கள் அவற்றை வைத்திருப்பார்கள் என்றும், அது தனக்குக் கிடைக்கும் அங்கீகாரம் என்றும் இந்த நாணயத்தை வடிவமைக்கும் ஜென்னிங்க்ஸ் கூறுகிறார். 

மேலும் படிக்க | பாரம்பரியங்கள் மாறுகின்றன! பிரிட்டன் புதிய பிரதமர் அறிவிப்பில் மாறும் மரபுகள்

உருவப்படத்தின் வெளிப்புறத்தில் லத்தீன் மொழியில் "King Charles III, by the Grace of God, Defender of the Faith" என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்டுள்ளன என்று AFP தெரிவித்துள்ளது. அரச மரபுகளின்படி, சார்லஸின் உருவப்படம் அவரது மறைந்த தாயார் இரண்டாம் எலிசபெத்தின் திசைக்கு எதிரே இடதுபுறமாக உள்ளது.

ஆல்ஃபிரட் தி கிரேட் முதல், அரச குடும்பத்தின் உருவங்களைக் கொண்ட நாணயங்களைத் தயாரிக்கும் பொறுப்பை ராயல் மிண்ட் செய்து வருகிறது. மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத் 70 ஆண்டுகள் ஆட்சியில் இருந்ததால், மற்ற அரசத் தலைவர்களை விட நாணயங்களில் அதிகமாக இடம் பெற்றிருந்தார் என்று கெவின் க்ளான்சி, ராயல் மின்ட் இயக்குனர் கூறுகிறார்.

இங்கிலாந்தில் தற்போது 27 பில்லியன் நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன, இவற்றில் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உருவப்படம் உள்ளது. இவை படிப்படியாக மாற்றப்பட்டு வருகின்றன. 

மேலும் படிக்க | ராணி எலிசபெத்துக்கு இறுதி அஞ்சலி செலுத்த சீன பிரதிநிதிகளுக்கு தடை! பின்னணி இதுதான்

மேலும் படிக்க | மீளாத்தூக்கத்தில் மண்ணை ஆளும் ராணி எலிசபெத்தின் இறுதி ஊர்வல புகைப்படங்கள்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News