சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை உயர்த்த ட்ரம்ப் முடிவு...

சீன பொருட்களுக்கு சுமார் 200 பில்லியன் அமெரிக்க டாலர் வரை இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்!

Last Updated : May 6, 2019, 05:39 PM IST
சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை உயர்த்த ட்ரம்ப் முடிவு... title=

சீன பொருட்களுக்கு சுமார் 200 பில்லியன் அமெரிக்க டாலர் வரை இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்!

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மறைமுக வர்த்தக போர் நடைபெற்று வரும் நிலையில் இரு நாடுகளும் இறக்குமதி வரியை உயர்த்தி வருவது வழக்கமாகி வருகின்றது.

இதை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், சீன அதிபர் ஸ ஜின்பிங்கும் கடந்த டிசம்பரில் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இச்சந்திப்பின் போது இருநாட்டு பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண்பது என முடிவு செய்யப்பட்டது. ஆனால், பேச்சுவார்த்தை மிகவும் மெதுவாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10%-த்தில் இருந்து 25%-மாக வரியை உயர்த்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதன் மூலம் சீன பொருட்களுக்கு $200 பில்லியன் அமெரிக்க டாலர் இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே இதுகுறித்து பேச சீன பிரதிநிதி விரைவில் வாஷிங்டன் வர உள்ளனர். இந்த நிலையில் சீன பொருட்களுக்கு இறக்குமதி வரியை அதிகரித்து டிரம்ப் அறிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending News