ஆணுறுப்பை இழந்த இளைஞர்... மனைவி செய்த செயல் - மிரண்டு போன மருத்துவர்கள்

மருத்துவர்கள் நோயாளி ஒருவருக்கு தொடர்ச்சியாக அளித்த தவறான சிகிச்சையால் அவருக்கு ஆணுறுப்பை முழுவதுமாக அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Dec 25, 2022, 10:23 AM IST
  • இந்த சம்பவம் நடந்தபோது, பாதிக்கப்பட்ட நபருக்கு வயது 30.
  • வலியால் துடித்த அந்த நபர் தனது ஆணுறுப்பை தானே வெட்ட முயன்றுள்ளார்.
  • உயிருக்கு ஆபத்தானது என்பதால் அவரது ஆணுறுப்பை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
ஆணுறுப்பை இழந்த இளைஞர்... மனைவி செய்த செயல் - மிரண்டு போன மருத்துவர்கள் title=

2014ஆம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டின் நான்டேஸ் மருத்துவ பல்கலைக்கழகத்தில் பல்வேறு தவறான சிகிச்சையால் நோயாளி ஒருவரின் ஆணுறுப்பை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், பாதிக்கப்பட்ட நபருக்கு தற்போது மருத்துவமனையில் சார்பில் இந்திய மதிப்பில் ரூ. 54 லட்சத்தை இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

பாதிக்கப்பட்ட நபர் 30 வயதாக (தற்போது 42) இருந்தபோது ஆணுறுப்பின் புறபகுதியில் ஏற்படும் புற்றுநோயான கேர்சினோமா நோய்க்கு அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.  

பாதிக்கப்பட்ட நபர் கூறும்போது,"என் பேச்சைக் கேட்காத அந்த மருத்துவர் மீது எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. அவர் என்னுடன் உள்ளே வெளியே விளையாட்டு விளையாடினார். ஆனால், உங்கள் ஆணுறுப்புக்கு பதில் சில சென்சார்கள் மட்டும் வைத்து ஈடுசெய்ய முடியாது அல்லவா" என்றார்.

நான்டெஸ் பல்கலைக்கழக மருத்துவமனையின் சிறுநீரக மருத்துவர், பாதிக்கப்பட்ட நோயாளியின் கட்டியை முடிந்தவரை அகற்ற முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த சிகிச்சை நடைமுறைகள் தொடர்ச்சியான தவறான விளைவுகள் ஏற்பட்டதால், நோயாளியின் ஆணுறுப்பு முழுவதும் புற்றுநோய் பரவியது என்று நான்டெஸ் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | பாலியல் சுகத்திற்காக பின்பகுதியில் வெடிகுண்டை சொருகிய 88 வயது முதியவர்... அலறிய மருத்துவர்கள்!

சிகிச்சைக்கு பின்னர், பாதிக்கப்பட்ட நபர் மிகுந்த வலியால் துடித்ததாக நீதிமன்றத்தில் கூறியுள்ளார். மேலும் வலியை பொறுக்க முடியாமல் தனது ஆணுறுப்பைத் தானே துண்டிக்கவும் அவர் முயற்சித்துள்ளார். "என்னிடம் கட்டர் இருந்தது, நான் மறைமுகமான இடத்திற்கு சென்று எனது ஆணுறுப்பை வெட்டிக்கொள்ளலாம் என்று இருந்தேன். அப்போது எனது மனைவிதான் என்னைத் தடுத்தார்" என பாதிக்கப்பட்ட நபர் நீதிமன்றத்தில் கூறியுள்ளார். 

அடுத்தடுத்த ஆண்டுகளில், கட்டி பெரிதாகி வலியை உண்டாக்கியது. மருத்துவர்கள் அதை முழுவதுமாக அகற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறிவிட்டனர்.

ஆணுறுப்பை அகற்ற வேண்டும் அல்லது புற்றுநோயால் அவர் இறந்துவிடுவார் என மருத்துவர்கள் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால், அவரின் ஆணுறுப்பு மொத்தமாக அகற்றப்பட்டது. அந்தச் சம்பவத்திற்குப் பிறகு, அந்த நபர், ஆண்குறியை மொத்தமாக அகற்றுவதற்கு வழிவகுத்தற்கும், தவறான சிகிச்சை அளித்ததற்கும் மருத்துவமனையிடம் இருந்து நீதிமன்றத்தில் போராடி 65,000 அமெரிக்க டாலர் (சுமார் ரூ. 54 லட்சம்) இழப்பீடாகப் பெற்றுள்ளார்.

மேலும் படிக்க | ஆணுறுப்பை பெரிதாக்க நினைத்து... ஆபத்தில் முடிந்த காரியம் - வெல்டிங் கட்டரால் வெட்டி எடுப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News