BJP, RSS-ன் சித்தாந்தம் இனவெறி, வெறுப்பை அடிப்படையாகக் கொண்டது -இம்ரான் கான்!

பாஜக மற்றும் RSS-ன் சித்தாந்தம் "இனவெறி" மற்றும் "வெறுப்பை அடிப்படையாகக் கொண்டது" என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். மேலும் சிறுபான்மையினரை கடுமையான நடவடிக்கைக்கு இலக்காகக் கொண்ட பாகிஸ்தானியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Last Updated : Feb 26, 2020, 06:35 PM IST
BJP, RSS-ன் சித்தாந்தம் இனவெறி, வெறுப்பை அடிப்படையாகக் கொண்டது -இம்ரான் கான்! title=

பாஜக மற்றும் RSS-ன் சித்தாந்தம் "இனவெறி" மற்றும் "வெறுப்பை அடிப்படையாகக் கொண்டது" என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். மேலும் சிறுபான்மையினரை கடுமையான நடவடிக்கைக்கு இலக்காகக் கொண்ட பாகிஸ்தானியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுடில்லி: வடகிழக்கு டெல்லியில் நடந்து வரும் அமைதியின்மையை இராஜதந்திர செல்வாக்கிற்கு பயன்படுத்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புதன்கிழமை முயன்றார். அந்த வகையில் இந்திய முஸ்லிம்களைப் பாதுகாக்க உலக சமூகம் சிருபான்மையினர் மீதான தாக்குதலுக்கு தலையிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

புதுடில்லியில் நடைப்பெற்று வரும் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் சம்பந்தப்பட்ட கொடூரமான வன்முறையில் இருபத்தி இரண்டு பேர் இறந்துள்ளனர், இது அரசியலமைப்பை மீறுவதாகவும், முஸ்லிம்களுக்கு பாகுபாடு காட்டுவதாகவும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து தனது கருத்தினை பதிவு செய்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்., பாஜக மற்றும் RSS சித்தாந்தம் "இனவெறி" மற்றும் "வெறுப்பை அடிப்படையாகக் கொண்டது என்று தெரிவித்துள்ளார். மேலும் சிறுபான்மையினரை கடுமையான நடவடிக்கைக்கு இலக்காகக் கொண்ட பாகிஸ்தானியர்களை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மறுபுறம், டிசம்பர் மாதத்தில் சட்டமாக்கப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம், மதத் துன்புறுத்தல் காரணமாக பாகிஸ்தானை விட்டு வெளியேறிய சிறுபான்மையினருக்கும் அல்லது வேறு இரண்டு இஸ்லாமிய நாடுகளுக்கும் "ஒரு புதிய நம்பிக்கையின் கதிரை" வழங்குவதாக இந்திய அரசு வலியுறுத்துகிறது. இந்திய முஸ்லிம்களுக்கு அவர்கள் குடியுரிமையை இழக்க மாட்டார்கள் என்று அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் கூர்மையான வீழ்ச்சியைக் கண்டு வருகின்றன. 

இந்நிலையில் கானின் இந்த கருத்து வெளியாகியுள்ளது. கானின் இந்த கருத்துக்களுக்கு இந்திய அரசு இன்னும் பதிலளிக்கவில்லை. ஐக்கிய நாடுகள் சபையில் சமீபத்தில் நடந்த ஒரு விவாதத்தில், காஷ்மீர் மற்றும் இந்தியாவின் இராணுவ அபிலாஷைகளைப் பற்றிய பாகிஸ்தான் தூதரின் கூற்றுகளுக்கு புதுடெல்லி தனது போட்டியாளரிடம் கூறி பதில் அளித்துள்ளது. 

Trending News