காதலியை கொன்று துண்டுகளாக்கி சுவற்றில் புதைத்த கொடூரம்! மனம் பதற வைக்கும் கொலை!

இளைஞர் ஒருவர் தனது 22 வயது லிவ்-இன் பார்ட்னரை கொடூரமாக கொலை செய்த பின் காதலியின் சடலத்தை துண்டு துண்டாக வெட்டி பெட்டியில் வைத்து சுவரில் புதைத்து வைத்துள்ளார். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 9, 2023, 09:13 PM IST
  • காவல் நிலையத்தில் இளம் பெண்ணின் படத்தைப் பார்த்த கொலையாளி.
  • காதலியின் உடலை துண்டு துண்டாக வெட்டி அமிலத்தை ஊற்றி சிதைத்த கொலையாளி.
  • பலியான இளம் பெண்ணின் பெயர் சிபோரா காக்னி.
காதலியை கொன்று துண்டுகளாக்கி சுவற்றில் புதைத்த கொடூரம்! மனம் பதற வைக்கும் கொலை! title=

வாழ்நாள் முழுவதும் ஒன்றாக கழிக்க வேண்டும் என்று கனவுடன் சேர்ந்து வாழும் அதே காதலர்கள் அல்லது லிவ்-இன் பார்ட்னர்கள், தங்கள் காதலிகளுக்கு எதிரான கொடூரமான குற்றங்கள் புரிந்து, அவர்களை கொடூரமாக மனம் பதற வைக்கும் வகையில், கொலை செய்யும் சம்பவங்களின் எண்ணிக்கைகள் வேகமாக அதிகரித்துள்ளன. சமீபத்தில், மகாராஷ்டிராவின் மீரா ரோட்டில் வசிக்கும் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தெரியவந்தது. இதற்கிடையில், ஒரு நபர் தனது 22 வயது லைவ்-இன் பார்ட்னரை கொடூரமாக கொன்ற சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கொலை செய்த பின் காதலியின் சடலத்தை துண்டு துண்டாக வெட்டி பெட்டியில் வைத்து சுவரில் புதைத்து வைத்துள்ளார். இப்போது இந்த குற்றத்தை அந்த கொலையாளி காதலன் தான் செய்திருப்பதை ஒப்புக் கொண்டிருக்கிறான்.

இரண்டு சுவர்களுக்கு இடையில் எச்சங்களை கண்டுபிடித்த காவல்துறை

இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் ஸ்பெயின் நாட்டில் நடந்துள்ளது. ஒரு அறிக்கையின்படி, ஸ்பெயின் காவல்துறை 22 வயது பெண் காணாமல் போன 9 ஆண்டுகளுக்குப் பிறகு, இரண்டு சுவர்களுக்கு இடையில் இறந்த உடலின் எச்சங்களை கண்டுபிடித்துள்ளது. ஆச்சரியப்படும் விதமாக, பாதிக்கப்பட்டவரின் குடியிருப்பில் அவரது எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பலியான இளம் பெண்ணின் பெயர் சிபோரா காக்னி. தனது காதலனுடன் பிரிந்த சிறிது நேரத்திலேயே, அவர் திடீரென காணாமல் போனார்.

காவல் நிலையத்தில் இளம் பெண்ணின்  படத்தைப் பார்த்த கொலையாளி 

போலிசார் காணாமல் போன இளம் பெண்ணை தேட தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போதிலும் அவர்களால் அவளை கண்டுபிடிக்கவே முடியவில்லை. என ஒரு கட்டத்தில், ஒரு துப்பும் கிடைக்காததன் காரணமாக போலீசார் விசாரணையை நிறுத்தியிருந்தனர். இந்நிலையில், மற்றொரு பெண் பவுலா கொலை செய்யப்பட்ட வழக்கில், கடந்த மாதம் கைது செய்யப்பட்ட குற்றவாளி, காணாமல் போன பெண் சிபோராவை கொலை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

காதலியின் உடலில் ஆசிட் ஊற்றிய கொலையாளி

கொலையாளியின் பெயர் மார்கோ ஜியோ ரோமியோ, அவரது வயது சுமார் 45. காவல் நிலைய அறிவிப்புப் பலகையில் சிபோராவின் படத்தைப் பார்த்து குற்றத்தை ஒப்புக்கொண்டதன் மூலம் குற்றம் சாட்டப்பட்டவர் குற்றத்தை புரிந்துள்ளது தெரிய வந்துள்ளது. காதலியின் உடலில் ஆசிட் ஊற்றியதாக கொலையாளி காதலன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | அமெரிக்க முன்னாள் அதிபர் மீதான வழக்கு! நம்பிக்கையை இழப்பீர்கள்: எச்சரிக்கும் மஸ்க்

உடல் உறுப்புகள் சுவரில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன

கொலையாளியின் வாக்குமூலத்திற்குப் பிறகு, 9 ஆண்டுகால வழக்கை மீண்டும் போலீசார் திறந்தனர். மே 17 அன்று மார்க் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். 28 வயது இத்தாலிய பெண்ணான பவுலாவை கொலை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மார்க் பவுலாவை 17 முறை குத்தி கொன்றதாக கூறப்படுகிறது.

பழைய குற்றத்தை ஒப்புக் கொண்ட  கொலையாளி

குற்றம் சாட்டப்பட்ட மார்க் பவுலாவின் கொலையை ஒப்புக்கொள்ளவில்லை, ஆனால் காணாமல் போன காதலி சிபோராவின் படத்தைப் பார்த்த பிறகு, தனது பழைய குற்றத்தை ஒப்புக் கொண்டார். ஜூலை 7, 2004 அன்று அவள் காணாமல் போனாள். சிபோராவின் உடலை துண்டு துண்டாக வெட்டி அமிலத்தை ஊற்றிய பின், அதை ஒரு பெட்டியில் வைத்து சுவர்களுக்கு இடையே மறைத்து வைத்ததாக மார்க் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் படிக்க | சூரியனுக்கு எவ்வளவு நெருக்கத்தில் செல்லலாம்? மர்மங்களை அவிழ்க்கும் Parker Solar Probe

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News