சூடானில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள்... UAE, சவுதி அரசுகளுடன் வெளியுறவுத் துறை ஆலோசனை!

சூடான் நாட்டு ராணுவத்துக்கும் துணை ராணுவ படைக்கும் இடையே அதிகாரத்தை கைப்பற்ற சண்டை மூண்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் உள்ள இரு பிரிவினரும், தங்களுக்குளேயே சண்டையிட்டு வருவதால், அங்கே மக்கள் வாழ்க்கை நரகமாகியுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 19, 2023, 03:02 PM IST
  • வெளியுறவு அமைச்சகம் மற்றும் கார்ட்டூமில் உள்ள இந்திய தூதரகம் ஆகியவை நாட்டின் நிலைமையை கண்காணித்து வருகின்றன.
  • இந்தியா ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து செயல்படுகிறது.
சூடானில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள்... UAE, சவுதி அரசுகளுடன் வெளியுறவுத் துறை ஆலோசனை! title=

சூடானில் தற்போது ஆட்சி கவிழ்ப்பு, உள்நாட்டு போர் போன்ற சூழல் நிலவுகிறது. நாடு முழுவதும் வன்முறையில் இதுவரை 200 பேர் உயிரிழந்துள்ளனர்.  சூடான் நாட்டு ராணுவத்துக்கும் துணை ராணுவ படைக்கும் இடையே அதிகாரத்தை கைப்பற்ற சண்டை மூண்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் உள்ள இரு பிரிவினரும், தங்களுக்குளேயே சண்டையிட்டு வருவதால், அங்கே மக்கள் வாழ்க்கை நரகமாகியுள்ளது. கடந்த சனிக்கிழமை மோதல் வெடித்த மோதலில் 200க்கும் மேற்பட்டோர் ல்கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், வன்முறையால் பாதிக்கப்பட்ட சூடானில் உள்ள இந்திய பிரஜைகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பல்வேறு நாடுகளுடன் இந்தியா நெருக்கமாக ஒருங்கிணைத்து வருவதாக அரசாங்க வட்டாரங்கள் புதன்கிழமை செய்தி நிறுவனமான PTI இடம் தெரிவித்தன.

சூடானில் நடந்து வரும் வன்முறைகளுக்கு மத்தியில், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் புதன்கிழமை சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள வெளியுறவுத் துறை அமைச்சர்களுடன் நிலைமை குறித்து விவாதித்தார்.

சூடானின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் வகையில், ராணுவம் மற்றும் துணை ராணுவம் இடையிலான சண்டையை (Sudan Violence) தடுத்து, கட்டமைப்பு ஒப்பந்தத்திற்கு திரும்ப வேண்டியதன் முக்கியத்துவத்தை இரு அமைச்சர்களும் வலியுறுத்தியதாக சவுதி அரேபியாவில் உள்ள வெளியுறவு அமைச்சகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | உணவும் இல்லை... குடிக்க தண்ணி கூட இல்லை... சூடானில் சிக்கி தவிக்கும் 31 கர்நாடக பழங்குடியினர்!

இந்தியாவில் இருந்து குறைந்தது 31 பேர் நாட்டில் சிக்கித் தவிக்கும் நிலையில், சூடானில் நிலவும் நிலைமையை வெளியுறவு அமைச்சகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. சூடானில் 31 கர்நாடக பழங்குடியினர் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் குடிக்க தண்ணீர், உணவு இல்லாமால், எதிர்காலத்தை நினைத்து, உயிர் பயத்துடன் தவித்து வருகின்றனர். சூடானில் அரசாங்கத்தின் இராணுவம் மற்றும் துணை இராணுவப் படைகளுக்கு இடையே அதிகரித்து வரும் மோதல்கள் பல புலம்பெயர்ந்தோரை இங்கு தவிக்க வைத்துள்ளது.

PTI மேற்கோள் காட்டிய ஆதாரங்களின்படி, சூடானில் நிலைமை "மிகவும் பதட்டமாக" இருப்பதால், தனிநபர்கள் எங்கிருந்தாலும் அவர்களின் பாதுகாப்பே இந்தியாவின் முன்னுரிமை என கூறப்பட்டுள்ளது

வெளியுறவு அமைச்சகம் மற்றும் கார்ட்டூமில் உள்ள இந்திய தூதரகம் ஆகியவை நாட்டின் நிலைமையை கண்காணித்து வருகின்றன. மேலும் இந்தியா ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து செயல்படுகிறது என்று ANI தெரிவித்துள்ளது.

முன்னதாக, இந்திய தூதரகம் திங்கள்கிழமை புதிய அறிவுரையை வெளியிட்டது, இந்தியர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் பதற்றம் அடையாமல் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. கார்ட்டூமில் இந்திய பிரஜை ஒருவர் தோட்டா காயங்களால் உயிரிழந்தார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க | சூடானில் ராணுவம் - துணை ராணுவம் இடையில் மூண்ட போர்! 25 பேர் பலி!

மேலும் படிக்க | பாவங்களை போக்கி அதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும் தாய்லாந்து சோங்க்ரான் நீர் திருவிழா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News