மேற்கத்திய நாடுகள் தடைக்கு பதிலடி; 113 விமானங்களை கைப்பற்றிய ரஷ்யா

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் காரணமாக உலகின் மிகப்பெரிய விமான நிறுவனத்தின் 113 ஜெட் விமானங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 19, 2022, 05:25 PM IST
மேற்கத்திய நாடுகள் தடைக்கு பதிலடி; 113 விமானங்களை கைப்பற்றிய ரஷ்யா title=

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் காரணமாக உலகின் மிகப்பெரிய விமான நிறுவனத்தின் 113 ஜெட் விமானங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் காரணமாக, உக்ரைன் பேரழிவை சந்தித்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல், இது உலக அளவிலும் பல்வேறு நிலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு முதல், உலகம் பல்வேறு வகையான சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த தாக்கத்தில் இருந்து மிக பெரிய தனியார் நிறுவனங்கள் கூட தப்பவில்லை.

ஏர்கேப் ஹோல்டிங்ஸ நிறுவனம் ஒரு பெரிய விமான குத்தகை நிறுவனமாகும். இந்த நிறுவனம் உலகின் மிகப்பெரிய ஜெட் விமானங்களின் உரிமையாளர். ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரால் இந்த நிறுவனம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் 113 விமானங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது.

மேலும் படிக்க | ஆட்சி அதிகாரத்தை உளவுத்துறை தலைவரிடம் ஒப்படைக்கும் புடின்... வெளியான அதிர்ச்சித் தகவல்

$2 பில்லியன் இழப்பு

மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதனால் அந்நிறுவனத்துக்கு 2 பில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், கோவிட் -19 தொற்றுநோயிலிருந்து மீண்ட பிறகு உலக அளவில் விமானங்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், வரவிருக்கும் காலங்களில் நிறுவனம் நஷ்டத்தில் இருந்து மீண்டு விடலாம் என அதிகாரிகள் கூறுகின்றனர். 

நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அங்கஸ் கெல்லி இது குறித்து கூறுகையில், எங்களது அனைத்து வணிக நிறுவனங்களும் நல்ல நிதி நிலைமையில் இருப்பதாக கூறியுள்ளார்.

காப்பீட்டு பெற கோரிக்கை 

22 ஜெட் விமானங்கள் மற்றும் 3 என்ஜின்களை ரஷ்ய அதிகாரிகளால் பறிமுதல் செய்யும் முன்பு நிறுவனம் அதனை மீட்டது. கைவிட்டு போன விமானத்தை மீட்பதற்கான காப்பீட்டு கோரிக்கையையும் தாக்கல் செய்துள்ளது. இருப்பினும், அந்த இழப்பீடு கோரிக்கைகளில் சில ரஷ்ய காப்பீட்டு நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. எனவே இழப்பீடு எப்போது கிடைக்கும், எவ்வளவு கிடைக்கும் என்பதை தற்போது கூற இயலாது என்று AirCap நிறுவனம் கூறியுள்ளது.

மேலும் படிக்க | உக்ரைன் போரின் தாக்கத்தை உணர்த்தும் மனம் பதற வைக்கும் காட்சிகள்

நிறுவனத்திடம் மொத்தம் 1,624 விமானங்கள் உள்ளன, இது எந்த ஒரு விமான நிறுவனத்திற்கும் சொந்தமான அல்லது இயக்கப்படும் விமானங்களை விட மிக அதிகம். ரஷ்யாவிடம் இழந்த ஜெட் விமானங்கள் ஏர்கேப்பின் கடற்படையின் நிகர மதிப்பில் 5% க்கும் குறைவானது தான் என கூறப்படுகிறது. 

ஏரோடைனமிக் அட்வைசரியின் நிர்வாக இயக்குனர் ரிச்சர்ட் அபுலாஃபியா இது குறித்து கூறுகையில், ஜெட் நிறுவனத்தின் நிதி இழப்பில் இருந்து ஏர்கேப் எளிதாக வெளியே வந்து விடும் என்றார். 

பிப்ரவரி 24 அன்று ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்தபோது, ​​ரஷ்ய விமானக் கப்பல்கள் 861 வணிக விமானங்களை இயக்கி வந்தன, விமானப் பகுப்பாய்வு நிறுவனமான செரியம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, அந்த விமானங்களில் பாதிக்கும் மேற்பட்டவையின் சந்தை மதிப்பு சுமார் 9.2 பில்லியன் டாலர் என கூறப்படுகிறது. 

மேலும் படிக்க |  ரஷ்யா போரில் டால்பின்களை களம் இறக்கியுள்ளதா; அமெரிக்கா வெளியிட்டுள்ள பகீர் தகவல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News