மகனை சாத்தான் என கொடுமை படுத்திய தாய்! 6 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்!

ஒரு தாய் தன் குழந்தையை பாதுகாக்கவும் பராமரிக்கவும் எதையும் செய்ய தயாராக இருப்பார். ஆனால், இதற்கு நேர்மாறாக ஒரு அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இதில் தாய் தன் மகனின் வாழ்க்கையை நரகமாக ஆக்கியுள்ளார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 10, 2023, 03:50 PM IST
  • சிறுவனின் தாய் குழந்தையின் உடலில் சாத்தான் குடி இருப்பதாக கூறினார்.
  • சிறுவன் தனக்கு புதிதாக பிறந்த இரட்டையர்களை காயப்படுத்தக்கூடும் என்று அவர் பயந்தார்.
  • சிறுவனின் தாய், சிறுவனிடம் சாத்தான் குடிகொண்டு இருப்பதாகக் கூறி விற்றதாகக் கூறப்படுகிறது.
மகனை சாத்தான் என கொடுமை படுத்திய தாய்! 6 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்! title=

உலகில் தாயின் அன்பிற்கு ஈடு இணை இல்லை. தாயின் அன்பு பலன்களை எதிர்பார்க்காத, தன்னலமில்லாத தூய அன்பு.  அன்புக்கு எல்லைகள் தெரியாது. ஒரு தாய் தன் குழந்தையை பாதுகாக்கவும் பராமரிக்கவும் எதையும் செய்ய தயாராக இருப்பார். ஆனால், இதற்கு நேர்மாறாக ஒரு அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இதில் தாய் தன் மகனின் வாழ்க்கையை நரகமாக ஆக்கியுள்ளார். மார்ச் மாதம் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட அமெரிக்காவின் டெக்சாஸைச் சேர்ந்த ஆறு வயது சிறுவன் ஒரு பல்பொருள் அங்காடியில் முன் பின் தெரியாத பெண்ணுக்கு அவனது தாயால் விற்கப்பட்டதாகத் கூறப்படுகிறது. சிறுவனின் தாய் சிண்டி ரோட்ரிக்ஸ், சிறுவனிடம் சாத்தான் குடிகொண்டு இருப்பதாகக் கூறி விற்றதாகக் கூறப்படுகிறது. உண்மையில் அந்த சிறுவன் வளர்ச்சி குறைபாடு இருந்ததால், சிறப்பான கவனிப்பு தேவைப்படும் குழந்தையாக இருந்திருக்கிறான்.

மகனை அடித்து கொடுமைப்படுத்திய தாய்

சிறுவனின் தாய் குழந்தையின் உடலில் சாத்தான் குடி இருப்பதாக கூறினார். மேலும் சிறுவன் தனக்கு புதிதாக பிறந்த இரட்டையர்களை காயப்படுத்தக்கூடும் என்று அவர் பயந்தார். தன் மகன் காணாமல் போனது குறித்து அவளிடம் விசாரித்தபோது, ​​அவன் அவனது தந்தையுடன் இருப்பதாக தான் நினைத்ததாக அவள் சொன்னாள். சிறுவன் தனது தாயால் பல்பொருள் அங்காடியில் விற்கப்பட்டதாக குடும்பத்தின் நெருங்கிய உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார். சிறுவனின் தாயான சிண்டி, தனது மகனை அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தி மிகவும் மோசமாக திட்டியதாகவும், அக்கறையே இல்லாமல் இருந்ததாகவும் அவர் கூறினார். சிறுவன் அதிகம் தண்ணீர் குடித்தால் அதிகமாக சிறுநீர் கழிப்பான் என அதனால் டயபர் மாற்ற வேண்டிய நிலை வரும் என்பதற்காக, அவன் குடிக்க தண்ணீர் கேட்டாலே அடிப்பாள் என கூறப்படுகிறது.

மேலும் படிக்க | கற்பழிப்பினால் ஏற்படும் கர்ப்பத்தை போன்ற கொடுமை வேறு எதுவும் இல்லை: கேரள நீதிமன்றம்

பல்பொருள் அங்காடிகளில் விற்கப்பட்ட குழந்தை

அவள் தன் மகனுக்கு, உணவளித்து, உடை மாற்றி பராமரிக்க விரும்பாததால் சிறுவனை தன் வாழ்வில் இருந்து அகற்றி விட வேண்டும் என முடிவு செய்தாள். சிறுவன் தனது தாய் மற்றும் மாற்றாந்தந்தையுடன் டெக்சாஸில் உள்ள எவர்மேனில் வசித்து வந்தான். அவர் கடைசியாக 2022 அக்டோபரில் ஊட்டச்சத்து குறைபாடு நிலையில் காணப்பட்டார். அவரது தாயார் தனது மாற்றாந்தந்தையுடன் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த நேரமும் இதுதான். மார்ச் 2023 இல் குழந்தையின் காணாமல் போன புகாரை குடும்பத்தினர் தாக்கல் செய்தனர். ஆனால் அவர் 2022 முதல் காணவில்லை என்று குழந்தை பாதுகாப்பு சேவைகளுக்கு ஒரு உதவிக்குறிப்பு கிடைத்தது. எனினும் போலீஸார் சிறுவன் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால், இந்த வழக்கு தற்போது மரண விசாரணையாக மாறியுள்ளதையும், உடலைக் கண்டுபிடித்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் போலீஸார் தற்போது வெளிப்படுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க | ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரம்... டொனால்டு டிரம்ப் மீது கிரிமினல் வழக்கு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News