கைஜாபாத்: உத்திரபிரேதச மாநிலம் கைஜாபாத் பகுதியை சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவரை சக மாணவர்கள் கடத்தி கொன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கைஜாபாதின் வைஷாலி பகுதியை சேர்ந்தவர் ப்ரமோத் ஷர்மா(16). இவர் கடந்த ஏப்ரல் 17-ஆம் நாள் மாயமானதாக வைஷாலி காவல் நிலையத்தில் அவரது தந்தை புகார் அளித்தார்.


இதனையதுத்து மாயமான மாணவர் ப்ரமோதை தேடும் பணி நடைப்பெற்றது. அவரது கைப்பேசி எண்ணை கொண்டு கடைசியாக அவர் பயணித்த இடத்தை கண்டறிந்து இவ்வழக்கு தொடர்பாக இரண்டு மாணவர்களை காவலர்கள் கைது செய்தனர்.


விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் ப்ரமோதின் நண்பர்கள் எனவும், தங்களுக்கு இருக்கும் கடன்களை அடைக்க ப்ரமோதினை கடத்தி அவரின் வீட்டில் மிரட்டி பணம் வாங்க திட்டம் தீட்டியதாகவும், பின்னர் பயத்தில் அவரை கொன்றதாகவும் தெரிவித்துள்ளனர்.


குற்றம்சாட்டப்பட்ட நபர்களில் ஒருவர் சுமார் 2.5 லட்சம் கடன் வாங்கியிறுப்பதாகவும், அதனை அடைக்க வேறு வழியில்லைமல் இவ்வாறு செய்ததாகவும் காவல்துறையில் தெரிவித்துள்ளான்.


தற்போது ப்ரமோதின் உடல் சடலமாக மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களின் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.