கடலூர்: நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் (என்எல்சி) ஒப்பந்த முறையில் தொழிலாளர்கள் தாற்காலிகமாக பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில், இன்று (திங்கள்கிழமை) காலை சுரங்கம் 1ஏ முன்பு தங்களை பணியிடை மாற்றம் செய்யாமல், ஒரே இடத்திலேயே பணி வழங்கக் கோரி  25 ஒப்பந்தத் தொழிலாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


அப்போது சிலர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்கொலைக்கு முயற்சித்த 25 பேரும் என்எல்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.