ஐதராபாத்: 12 வயது மதிக்கத்தக்க சிறுவன் குடியிறுப்பில் இருக்கும் Lift-ல் சிக்கு உடல் நசுங்கி பலியானார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐதராபாத்தின் பராகப்புத்ரா என்னும் பகுதியில் செய்திதாள் வினியோகம் செய்ய சென்ற சிறுவன் லிப்டில் சிக்கி பலியாகியுள்ளார். கோடை விடுமுறையினை அடுத்து தனது பெற்றோருக்கு உதவும் வகையில் பலியான சிறுவன் செய்திதாளினை வினியோகம் செய்துள்ளார்.


இதுகுறித்து கன்சிகுடா பகுதி காவல்துறை அதிகாரி தெரிவிக்கையில், சம்பவம் நடைப்பெற்ற லிப்ட் ஆனது இரண்டு கதவுகளை கொண்டது. இரண்டு கதவுகளுக்கு இடையிலும் சிறிதளவு இடைவெளியே இருந்தது. செய்திதாளினை வினியோகம் செய்ய சென்ற சிறுவன், செய்துவிட்டு வெளியே வருகையில் மீண்டும் உள்ளே செல்ல முயற்சித்துள்ளார்.


ஏற்கனவே புறப்பட்டுவிட்ட லிப்ட் ஆனது, உள்ளே செல்ல முயன்ற சிறுவனையும் தன்னுடன் இழுத்து சென்றது. குடியிறுப்பின் காவலர் சிறுவனின் உடலை மீட்க முயற்சித்துள்ளார் எனினும் முடியாமல் போனது.


காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுவனின் உடலினை ஓஸ்மானியா பொது மருத்துவமனைக்கு கொண்டுச்சென்றுள்ளனர். எனினும் மருத்துவமனைக்கு கொண்டு வருவதற்கு முன்னதாகவே சிறுவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.


இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.