டெல்லியில் தொழிலதிபர் ஒருவர் தனக்கு நடந்த விபத்துக்கு காரணம் ஒரு பசு மாடு என காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கடந்த ஏப்ரல் 27-ம் தேதி மாதா ஷெர்வாலி என்ற மார்க்கெட் பகுதியில் தொழில் சமந்தமாக அவரது இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்து வந்த பசுமாடு தொழிலதிபரின் வாகனத்தில் வேகமாக மோதியுள்ளது. இதில் நிலைதடுமாறி கட்டுப்பாடு இன்றி கீழே விழுந்தார். 


இந்த விபத்தில் தொழிலதிபருக்கு காலில் முறிவு ஏற்பட்டுள்ளது.   இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த தொழிலதிபர் தனக்கு நடந்த விபத்துக்கு காரணம் ஒரு மாடுதான் என அங்கிருந்த காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்தும் வருகின்றனர்.