கேரளாவில் நடை பெற்ற விருது வழங்கும் விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை பாவனா வண்ண உடைகள் அணிந்து மேடையில் நடனம் ஆடினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலம் தமிழில் பாவனா அறிமுகமானார், பின்னர் ஜெயம் கொண்டான், அசல், தீபாவளி போன்ற படங்கள் மூலம் கோலிவுட்டில் நிலையான இடம் பிடித்தார். பின்னர் மலையாள மொழிப் படங்களில் பிஸியானாதால் தமிழ் திரையுலகில் தனது விஜயத்தை குறைத்துக்கொண்டார்.


இவர் கன்னட படங்களில் நடித்தபோது கன்னட தயாரிப்பாளரும், கேரளாவைச் சேர்ந்த தொழில் அதிபருமான நவீனை காதலித்தார். பின்னர், கடந்த ஜனவரி மாதம் தனது காதலன் நவீனை அவர் திருமணம் செய்துகொண்டார்.


இத்திருமணத்தில் இரு வீட்டார் உறவினர்களும், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். திருமணத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பாவனா – நவீன், அனைவரது வாழ்த்துகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.


இதையடுத்து, அவருடைய திருமணத்திற்கு பிறகும் அவருக்கு பட வாய்ப்புகள் வழக்கம்போல் தடையில்லாமல் வந்துகொண்டு தான் இருக்கின்றது. 


இந்த ஆண்டில் மட்டும் நடிகை பாவனா கன்னடத்தில் 3 படங்களில் நடித்து வருகிறார். இருப்பினும் அவர் மலையாள படம் எதிலும் நடிக்க அவர் ஆர்வம் காட்டவில்லை. 


இதையடுத்து, நடிகை பாவனா இனி கன்னட படங்களில் மட்டுமே நடிக்க ஆர்வம் காட்டி வருவதாக சமூக வலை தளங்களில் தகவல்கள் வேகமாக பரவினர்.


இந்நிலையில், கேரளாவில் நடந்த விருது விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை பாவனா வண்ண உடைகள் அணிந்து மேடையில் நடனம் ஆடினார்.


இதன் மூலம், மலையாள சினிமாவில் மீண்டும் தான் கால் பதிக்க விரும்புவதை  நடிகை பாவனா வெளிப்படுத்தினார். 


மேலும் அவர், திருமணம் ஆகிவிட்டதால் நடிப்பை விட்டு விலகும் எண்ணம் தமக்கு இல்லை' என்று பதில் தெரிவித்துள்ளார்.