தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நேற்று முன்தினம் 100_வது நாளாக போரட்டம் நடைபெற்றது. இதனால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இந்தக் கலவரத்தில் போராட்டக்காரர்கள் சுமார் 13 உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். குருவியை சுடுவது போல் போலீஸார் துப்பாக்கியால் சுட்டுள்ளதால் அனைவரும் கொந்தளிப்பில் உள்ளனர்.


இந்நிலையில் நேற்று மீண்டும் துப்பாக்கிச் சூடும் , தடியடியும் நடத்தப்பட்டது. மக்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சிகளும் துப்பாக்கிச் சூட்டுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனிடையே ஆட்சியரும், மாவட்ட எஸ்.பி.யும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 


இன்று தமிழ்நாடு வணிகர் சங்கம் இன்று கடையடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் கடையடைப்பு நடத்த வணிகர் சங்கம் முடிவு செய்துள்ளதை அடுத்து இன்று காலை முதல் கடைகள் மூடப்பட்டு கிடந்தன.


இந்நிலையில்  ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி, நேற்று முன்தினம் நடைபெற்ற கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் கலவரமாக வெடித்தது. போராட்ட கூட்டத்தை கலைக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இந்த சம்பவத்தில் 9 பேர் பலி ஆனார்கள் மேலும் பலர் காயம் அடைந்தனர். 


நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்து தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த செல்வசேகர் என்பவர் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதனால், பலி எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.