சமரசதீர்வு மையம் துவக்கப்பட்டு 13 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் விழிப்புணர்வு முகாம் துவங்கப்பட்டது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமரசதீர்வு மையம் துவக்கப்பட்டு 13 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையிலும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், இன்று காலை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாற்றுமுறை சமரசதீர்வு மையத்தில் விழிப்புணர்வு முகாமினை நீதியரசர் குலுவாடி மற்றும் ரமேஷ் அவர்கள் தொடங்கிவைத்தனர்.


மேலும் சமரசதீர்வு மைய பெயர் பலகையினை நீதியரசர் குலுவாடி அவர்கள் திறந்துவைத்து சிறப்புரை ஆற்றினார். 


இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகரகாவல் ஆணையர் AK விஸ்வநாதன், சென்னை மாவட்ட ஆட்சியர் வெ. அன்புச்செல்வன் அவர்களும் கலந்துக்கொண்டனர்.