விவசாய கடனை தள்ளுபடி செய்யக்கோரி கர்நாடகாவில் பாஜக சார்பில் மே28-ம் தேதி பந்த் நடத்தப்படும் என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

222 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் 78 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களிலும் வெற்றிப்பெற்றன. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அதிக தொகுதிகளை வென்ற பாஜக-வை ஆட்சி அமைக்குமாறு கர்நாடக கவர்னர் அழைப்பு விடுத்தார். 


இதனையடுத்து எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். மேலும் 15 நாள் அவகாசத்தில் பெருன்பான்மையினை நிருப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் ஆளுநர் விதித்தார். ஆனால் பெருபான்மையை (மே 19) நிருப்பிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. 


ஆனால் மே 19-ஆம் நாள் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு நடப்பதற்கு முன்னரே, உருக்கமான உறையினை நிகழ்த்திய முதல்வர் எடியூரப்பா, தனது முதல்வர் பதவியினை ராஜினாமா செய்தார். அவர் ராஜினாமா செய்ததை அடுத்து, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதள கட்சி கூட்டணியின் சார்பில் HD குமாரசாமி அவர்கள் ஆளுநர் முன்னிலையில் கர்நாடகா முதலவராக பதவி ஏற்றார். 


இதையடுத்து, பதவி ஏற்று கொண்ட மதசார்பற்ற ஜனதாதள தலைவர் HD குமாரசாமி கர்நாடக சட்டப்பேரவை தேர்தலின்போது ஆட்சிக்கு வந்தால், விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக, வாக்குறுதி அளித்திருந்தார். 


இந்நிலையில் முதல்வராக பொறுப்பேற்றுள்ள நிலையில், தற்போது விவசாய கடனை தள்ளுபடி செய்யும் திட்டம் இல்லை என குமாரசாமி தெரிவித்தார். இதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வாக்குறுதியை நிறைவேற்றாததை கண்டித்து, 28ம் தேதி (நாளை) மாநிலம் தழுவிய பந்த் நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். 


தேர்தல் ரத்து செய்யப்பட்ட ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் நாளை தேர்தல் நடப்பதால், பந்த் நடைபெறாது என தகவல் வெளியாகின. எனினும், இதை மறுத்துள்ள எடியூரப்பா, விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக தேர்தலின்போது குமாரசாமி வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் பதவிக்கு வந்ததும் வாக்குறுதியை நிறைவேற்ற தவறிவிட்டார். இதை வன்மையாக கண்டிக்கிறேன். விவசாய கடன் தள்ளுபடி செய்யும் வரை தொடர்ந்து போராடுவோம். இதன் படி, திட்டமிட்டபடி நாளை பந்த் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.