7வது ஊதியக்கமிஷன், சமீபத்திய புதுப்பிப்புகள்: வரும் மாதங்களில் மத்திய அரசு ஊழியர்கள் பல வித நல்ல செய்திகளை பெறவுள்ளனர். ஜனவரி 2024 -இல் அகவிலைப்படியில் நல்ல ஏற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சமீபத்தில் வெளிவந்த ஏஐசிபிஅ குறியீடு (AICPI Index) இதை சுட்டிக்காட்டுகின்றது. இந்த தரவுகளின் அடிப்படையில் தற்போது அகவிலப்படி 49 சதவிகிதத்தை எட்டிவிட்டது. ஜனவரியில் அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்? இதை பற்றி இந்த பதிவில் காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏஐசிபிஐ குறியீட்டின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் 138.4 மதிப்பெண்களைக் காட்டுகின்றன. இதில் 0.9 புள்ளிகள் உயர்வு ஏற்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்திற்கான தரவு இது. நவம்பர் மாத இறுதியில் இந்த தரவு வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான தரவு வரவேண்டும். ஒவ்வொரு ஆண்டும் இரு முறை அகவிலைபப்டியில் மாற்றம் ஏற்படுகின்றது. ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைபப்டி திருத்தப்படுகின்றது. முந்தைய ஆண்டில் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான மாதங்களின் ஏஐசிபிஐ தரவின் அடிப்படையில் ஜனவரி மாத அகவிலைப்படியும் (DA), ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டின் அடிப்படையில் ஜூலை மாத அகவிலைப்படியும் தீர்மானிக்கப்படுகின்றன. 


அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்?


இதுவரை அகவிலைப்படியின் அதிகபட்ச அதிகரிப்பு 5% ஆக இருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது. ஏஐசிபிஐ தரவிலிருந்து பெறப்பட்ட டிஏ மதிப்பெண் இப்படிப்பட்ட அதிகரிப்பைதான் காட்டுகிறது. தற்போதைய வளர்ச்சி விகிதத்தில், அகவிலைப்படி 51% ஐ எட்டும் என்று நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.


இது நடந்தால், 5% டிஏ உயர்வு (DA Hike) ஒரு மிகப்பெரிய அதிகரிப்பாக இருக்கும். ஏஐசிபிஐ இன்டெக்ஸ் அகவிலைப்படியைக் கணக்கிடுகிறது. பணவீக்கத்துடன் ஒப்பிடும்போது ஊழியர்களின் கொடுப்பனவு எவ்வளவு அதிகரிக்க வேண்டும் என்பதை குறியீட்டில் உள்ள பல்வேறு துறைகள் தொடர்பான பணவீக்க தரவு காட்டுகிறது.


மேலும் படிக்க | 1 ரூ.கோடி டர்ன்-ஓவர் செய்யும் விவசாயி! மத்திய அரசின் Billionaire award பெறும் ரமேஷ் நாயக்


நான்கு மாத தரவுகளில் DA 3% அதிகரித்துள்ளது


தற்போது, ​​ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கான ஏஐசிபிஐ குறியீட்டு தரவு வெளியிடப்பட்டுள்ளது. அகவிலைப்படி தற்போது 49.9% மதிப்பெண்ணிலும், குறியீட்டு எண் 138.4 புள்ளிகளிலும் உள்ளது. நவம்பர் மாதத்திற்குள் இந்த எண்ணிக்கை 50% ஐ தாண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.


இதற்குப் பிறகு, டிசம்பரில் இது 0.54 புள்ளிகள் உயர்ந்து மொத்த அகவிலைப்படி (Dearness Allowance) 51% ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 2023 டிசம்பரில் AICPI குறியீட்டு புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்ட பிறகு, அகவிலைப்படியின் மொத்த அதிகரிப்பு என்ன என்பது தீர்மானிக்கப்படும்.


பணவீக்க விகிதத்தில் பெரும் ஏற்றம் இருக்கும்


7வது ஊதியக் குழுவின் (7th Pay Commission) கீழ், ஜூலை முதல் டிசம்பர் 2023 வரையிலான ஏஐசிபிஐ எண்கள் அகவிலைப்படியைத் தீர்மானிக்கும். தற்போது அகவிலைப்படி சுமார் 49.9% ஐ எட்டியுள்ளது. இன்னும் இரண்டு மாதங்களுக்கான புள்ளிவிவரங்கள் வரவுள்ளன. இந்த மாதங்களில் 3% அதிகரிப்பு இருக்கலாம் என நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். இந்த போக்கைப் பார்த்தால் ​​இன்னும் சுமார் 1.60 சதவிகிதம் உயர்வு இருக்கும் என கணிக்கப்படுகின்றது. 


ஏஐசிபிஐ குறியீடு


- ஏஐசிபிஐ குறியீடு, பணவீக்கத்துடன் ஒப்பிடும்போது ஊழியர்களின் கொடுப்பனவுகள் எவ்வளவு அதிகரிக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது.
- தரவை பகுப்பாய்வு செய்யும் ஏஐசிபிஐ குறியீட்டை பொறுத்து அகவிலைப்படியில் மாற்றம் ஏற்படுகின்றது. 
- பல்வேறு துறைகளின் தரவுகளின்படி, அகவிலைப்படி 5% அதிகரிக்கலாம்.
- இதனால் மத்திய அரசு ஊழியர்களுக்கு (Central Government Employees) கூடுதல் கொடுப்பனவுகள் கிடைக்கும், அவர்களின் நிதி நிலை மேம்படும்.


மேலும் படிக்க | ஒருவர் எத்தனை வங்கிக் கணக்குகளைத் திறக்கலாம்? வரம்பு மீறினால்... ரிசர்வ் வங்கி விதி என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ