7வது ஊதியக்குழு, சமீபத்திய அப்டேட்: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இன்னும் சில நாட்களில் பல நல்ல செய்திகள் கிடைக்கவுள்ளன. ஏனெனில், மோடி அரசு ஒன்றல்ல இரண்டு பெரிய பரிசுகளை வழங்கப் போகிறது. மோடி அரசாங்கம் அகவிலைபப்டி அதிகரிப்புடன், ஃபிட்மென்ட் ஃபாக்டர் குறித்த பெரிய புதுப்பிப்பையும் வழங்கப் போகிறது. இது ஊழியர்களுக்கு ஒரு பெரிய பரிசாக இருக்கும். அகவிலைப்படியை பொறுத்தவரை இந்த பண்டிகை காலத்தில் அரசாங்கம் டிஏ -வை சுமார் 4 சதவிகிதம் அதிகரிக்கலாம். இது அடிப்படை சம்பளத்தில் பெரும் அதிகரிப்பை ஏற்படுத்தும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த இரு உயர்வும் கிடைத்தால், அது, பணவீக்கம் மற்றும் விலைவாசி அதிகரிப்பால் சிக்கலில் இருக்கும் ஊழிய்ரகளுக்கு பெரிய நிவாரணமாக இருக்கும். இதற்கு முன்னர் மார்ச் மாதத்தில் அரசாங்கம் அகவிலைப்படியை 4 சதவிகிதம் அதிகரித்தது. அது ஜனவரி 2023 முதல் அமலுக்கு வந்தது. அப்போது 38 சதவிகிதமாக இருந்த அகவிலைப்படி (Dearness Allowance) 42 சதவிகிதமாக உயர்ந்தது. தற்போது ஜூலை 2023 -க்கான அகவிலைப்படி உயர்வுக்காக அனைவரும் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். இது தொடர்பான அறுவிப்பு விரைவில் வரும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அகவிலைப்படி மற்றும் ஃபிட்மெண்ட் ஃபாக்டரில் எவ்வளவு உயர்வு இருக்கும் என்பதை இந்த பதிவில் விரிவாக காணலாம். 


அகவிலைப்படி உயர்வு (DA Hike): 


மத்திய அரசு ஊழியர்களின் (Central Government Employees) அகவிலைப்படி 3 சதவிகிதம் அதிகரித்து மொத்த அகவிலைப்படி 45 சதவிகிதமாக உயரும் என ஒரு சாரார் கூறி வருகிறார்கள். எனினும், ஜனவரி 2023 முதல் ஜூலை 2023 வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களை வைத்து பார்க்கும்போது அகவிலைப்படி 4 சதவிகிதம் அதிகரித்து மொத்த அகவிலைப்படி 46 சதவிகிதமாக உயரும் என பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். எனினும், டிஏ ஹைக் (DA Hike) எவ்வளவு இருக்கும் என்பது அரசின் அறிவிப்பு வந்தவுடன் தான் தெரியவரும். 


மேலும் படிக்க | மிடில் கிளாஸ் மக்களுக்கு கொண்டாட்டம்: நடுத்தர வகுப்பு மானியத் திட்டம் மூலம் அனைத்திற்கும் சப்சிடி!


ஆண்டுக்கு இருமுறை DA உயர்த்தப்படுகிறது, இதன் விகிதங்கள் ஜனவரி 1 முதல் ஜூலை 1 முதல் முதல் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. ஜனவரி மாதத்திற்கான டிஏ அதற்கு முந்தைய ஆண்டில் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டின் அடிப்படையிலும், ஜூலை மாத டிஏ அந்த ஆண்டின் ஜனவரி முதல் ஜூலை வரையிலான ஏஐசிபிஐ எண்களின் அடிப்படையிலும் கணக்கிடப்படுகின்றது. இப்போது அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டால், அதன் விகிதங்கள் ஜூலை 1, 2023 முதல் பொருந்தும். இதனால் ஊழியர்களுக்கு ஜூலை 1 முதலான டிஏ அரியர் (DA Arrears) தொகையும் கிடைக்கும். 


ஃபிட்மென்ட் ஃபாக்டரில் ஏற்றம் 


மோடி அரசாங்கம் ஃபிட்மென்ட் ஃபாக்டரையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் அடிப்படையில்தான் ஊழியர்களின் அடிப்படை சம்பளம் நிர்ணயிக்கப்படுகின்றது. தற்போது ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.60 மடங்காக உள்ளது. இதை 3.0 உயர்த்த கோரிக்கைகள் உள்ளன. இது அடிப்படை சம்பளத்தில் பம்பர் அதிகரிப்பை ஏற்படுத்தும். இந்த அதிகரிப்பு ஏற்பட்டால், அதன் மூலம் பல லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள். 


சுமார் 1 கோடி குடும்பங்கள் அகவிலைப்படி உயர்வின் பலனைப் பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது. இது தவிர, நிலுவையில் உள்ள டிஏ பாக்கிகள் குறித்தும் சில நல்ல செய்திகளை அரசு ஊழியர்கள் பெறக்கூடும். எனினும், இது குறித்து அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறப்படவில்லை.


மேலும் படிக்க | EPFO உறுப்பினர்களுக்கு அடிச்சுது லாட்டரி: விரைவில் கணக்கில் வட்டி தொகை, இப்படி செக் செய்யலாம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ