7th Pay Commission DA Hike News: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த நல்ல செய்தி நேற்று அவர்களுக்கு கிடைத்தது. நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (Dearness Allowance) மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் (Dearness Relief) ஆகியவற்றை 3% அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் சுமார் 1 கோடி மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மோடி அரசு ஒரு பெரிய நற்செய்தியை வழங்கியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Central Government Employees: 53% ஆனது அகவிலைப்படி


இந்த அறிவிப்புக்கு பின்னர் மத்திய அரசு ஊழியர்களின் டிஏ (DA) மற்றும் டிஆர் (DR) இப்போது 53% ஆக உயர்ந்துள்ளன. இதற்கு முன்னர், ஜனவரி 2024 -இல் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 4% அதிகரிக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பு மார்ச் 2024 -இல் வந்தது.


அகவிலைப்படி தொகை அடிப்படை சம்பளத்தில் இணைக்கப்படுமா?


அகவிலைப்படி 53% -ஐ எட்டியதை அடுத்து, அகவிலைப்படி தொகை அடிப்படை சம்பளத்தில் இணைக்கப்படுமா என்ற கெள்வி பலரிடமிருந்து வந்த வண்ணம் உள்ளது. இதற்கான காரணம் என்ன? இதைத் தொடர்ந்து அரசும் இது தொடர்பான தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. அரசு வெளியிட்டுள்ள அறிக்கைக்கு பிறகு ஊழியர்களின் எதிர்பார்ப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.


அகவிலைப்படி பூஜ்ஜியம் ஆகுமா?


அகவிலைப்படி 50% -ஐ தாண்டும் போது, அது பூஜ்ஜியம் ஆக்கப்பட்டு அகவிலைப்படித் தொகை அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படும் என்று ஒரு விதி உள்ளதாக கூறப்படுகின்றது. இப்படி ஒரு செயல்முறை உள்ளது என்றும், ஆனால், இப்படித்தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும் பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். அகவிலைப்படி 50 சதவீதத்தை தாண்டும்போது அது அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்படும் என 6வது ஊதியக்குழுவில் கூறப்பட்டுள்ளது. இதற்கு தற்போது அரசு பதில் அளித்துள்ளது.


மேலும் படிக்க | PF உறுப்பினர்களுக்கு முக்கிய அப்டேட்: EPF பணத்தை எடுக்கும் விதிகளில் மாற்றம்.. புதிய விதிகள் இதோ


அடிப்படை சம்பளத்துடன் டிஏ மற்றும் டிஆர் சேர்க்கப்படுமா?


- ஐந்தாவது மற்றும் ஆறாவது ஊதியக் குழுவின் அறிக்கை (பாரா 105.11) அடிப்படைச் சம்பளத்துடன் டிஏவை இணைக்கவும், அத்தகைய இணைப்பை டியர்னஸ் பேவாக (Dearness Pay) குறிப்பிடவும் பரிந்துரைத்தது. 


- இந்தப் பரிந்துரையைத் தொடர்ந்து, 2004ல், அகவிலைத் தொகையை உருவாக்க, அடிப்படைச் சம்பளத்தின் 50% டிஏ இணைக்கப்பட்டது. கொடுப்பனவுகள் (Allowances) மற்றும் ஓய்வூதியப் பலன்களைக் (Retirement Benefits) கணக்கிடும் நோக்கத்திற்காக இது இணைக்கப்பட்டது. ஆனால் பின்னர் அது மாற்றப்பட்டது. எனினும், இந்த மாற்றம் தானாக நடக்காது. இது குறித்து அரசு முடிவெடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


அரசு கூறியுள்ள விளக்கம் என்ன?


அகவிலைப்படி பூஜ்ஜியம் ஆக்கப்படுமா என்பது பற்றியும், அகவிலைப்படி தொகை அடிப்படை ஊதியத்துடன் (Basic Salary) இணைக்கப்படுமா என்பது பற்றியும் அரசு ஆலோசித்து வருவதாக தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். 


சம்பள உயர்வு


அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்கும் எண்ணம் இல்லை என்று கூறாமல் இது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளது, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களிடையே (Pensioners) பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்படி நடந்தால், ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் மிகப்பெரிய ஏற்றம் ஏற்படும். இது பெரிய அளவிலான ஊதிய உயர்வுக்கு வழி வகுக்கும்.


மேலும் படிக்க | SBI MF புதிய திட்டம்: SIP மூலம் முதலீடு, பெரிய அளவில் வருமானம்... விவரம் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ