7th Pay Commission, DA hike: மத்திய அரசு ஊழியர்களுக்கு பல பரிசுகள் வரிசையாக காத்துக்கொண்டு இருக்கின்றன. சமீபத்தில் ஊழியர்களின்   அகவிலைப்படியை மத்திய அரசு 4% அதிகரித்தது. இதைத் தொடர்ந்தூ ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் 50% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு 2024 ஜனவரி முதல் அமலுக்கு வரும். சமீபத்திய அகவிலைப்படி உயர்வைத் தொடர்ந்து, மத்திய அரசு ஊழியர்களுக்கு மார்ச் 30 ஆம் தேதி சம்பள உயர்வு, வீட்டு வாடகை கொடுப்பனவு மற்றும் இரண்டு மாத நிலுவைத் தொகை ஆகியவை வழங்கப்படும் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு நாள் முன்னரே சம்பளம் வரும்


இந்த மார்ச் 31 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறையாக இருப்பதால், மத்திய அரசு ஊழியர்களின் (Central Government Employees) உயர்த்தப்பட்ட சம்பளம் மார்ச் 30-ம் தேதியே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், மார்ச் 31-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வங்கிகளைத் திறந்து வைத்திருக்க இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) ஏற்கனவே வங்கிகளைக் கேட்டுக் கொண்டுள்ளது. அன்று நடப்பு நிதியாண்டின் கடைசி நாள் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


50% ஆனது அகவிலைப்படி 


மத்திய அரசு இந்த மாத தொடக்கத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை (Dearness Allowance) 4 சதவீதம் உயர்த்தி அறிவித்தது. சமீபத்திய டிஏ உயர்வு (DA Hike) ஜனவரி 2024 முதல் நடைமுறைக்கு வரும். இந்த உயர்வுக்கு பிறகு ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் 50 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த உயர்வின் காரணமாக, மார்ச் மாத சம்பளத்துடன் ஊழியர்களுக்கு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாத டிஏ அரியர் தொகையும் (DA Arrears) கிடைக்கும்.


மேலும் படிக்க | வீட்டுக்கடனை வேகமாக அடைக்க வேண்டுமா? ‘இதை’ மட்டும் செய்யுங்கள் பாேதும்..


வீட்டு வாடகை கொடுப்பனவு (House Rent Allowance)


அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டியுள்ளதால், வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) மேலும் அதிகரித்துள்ளது. 7 வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் படி, அகவிலைபப்டி 50% -ஐ எட்டும்போது எச்ஆர்ஏ (HRA), அதாவது வீட்டு வாடகை கொடுப்பனவையும் அதிகரிக்க வேண்டும். நகரத்தின் வகைப்பாட்டின் படி, ஊழியர்களுக்கான வீட்டு வாடகை கொடுப்பனவு அதிகபட்சமாக 30 சதவீதம் வரை அதிகரிக்கும். 


சமீபத்திய அகவிலைப்படி உயர்வு, மத்திய ஊழியர்களுக்கான குழந்தை பராமரிப்பு கொடுப்பனவு, குழந்தை கல்வி கொடுப்பனவு, விடுதி மானியம், இடமாற்றத்தின் மீதான பயணப்படி, ஆடை அலவன்ஸ், பணிக்கொடை உச்சவரம்பு மற்றும் மைலேஜ் கொடுப்பனவு போன்ற சிறப்பு கொடுப்பனவுகளுக்கு வழிவகுக்கும். இதனால் ஊழியர்களின் மாத வருமானத்தில் அதிகப்படியான உயர்வு ஏற்பட்டுள்ளது.


அகவிலைப்படி 50% -ஐ எட்டியுள்ளதால், பின்வரும் அலவன்சுகளிலும் அதிகரிப்பு ஏற்படும்:


- வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA), 
- குழந்தைகளின் கல்வி உதவித்தொகை
- குழந்தை பராமரிப்புக்கான சிறப்பு கொடுப்பனவு
- விடுதி மானியம்
- இடம் மாற்றத்துக்கான TA 
- பணிக்கொடை வரம்பு
- யூனிஃபார்ம் கொடுப்பனவு
- சொந்த வாகனத்திற்கு மைலேஜ் கொடுப்பனவு
- தினசரி கொடுப்பனவு
- பயணக் கொடுப்பனவு
- கேன்டீன் அலவன்ஸ்
- டெபுடேஷன் அலவன்ஸ்


மேலும் படிக்க | 7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வுடன் 2 மாத நிலுவைத் தொகை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ