7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வுடன் 2 மாத நிலுவைத் தொகை!

7th Pay Commission: மார்ச் 31-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் மத்திய ஊழியர்களின் புதிய உயர்த்தப்பட்ட சம்பளம் மார்ச் 30-ம் தேதியே கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

 

1 /5

இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை மார்ச் 25-ம் தேதி கொண்டாடப்பட்டது.  இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு மார்ச் 30-ம் தேதி ஹோலி பரிசு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

2 /5

மார்ச் 31-ம் தேதி விடுமுறை தினம் மத்திய ஊழியர்களின் புதிய சம்பளம் மார்ச் 30-ம் தேதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  ஆனால் இந்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் திறந்து இருக்கும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.  

3 /5

மத்திய ஊழியர்களின் அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி அரசு ஏற்கனவே மகிழ்ச்சி செய்தியை அறிவித்தது.  இதன் மூலம் ஊழியர்களின் கொடுப்பனவு தற்போது 46 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக அதிகரித்துள்ளது.   

4 /5

இந்த ஊதிய உயர்வு கடந்த ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளதால், மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஜனவரி, பிப்ரவரி ஆகிய இரண்டு மாத நிலுவைத் தொகை கிடைக்கும். மத்திய அரசு ஊழியர்களின் கொடுப்பனவு 50% ஆக உயர்ந்துள்ளதால், வீட்டு வாடகை கொடுப்பனவு அதாவது HRA வும் அதிகரித்துள்ளது.   

5 /5

50 சதவீத டிஏ காரணமாக, மத்திய ஊழியர்களின் குழந்தை கல்வி உதவித்தொகை, விடுதி மானியம், பயணப்படி, பணிக்கொடை உச்சவரம்பு, மைலேஜ் கொடுப்பனவு ஆகியவை அதிகரிக்கப்பட்டுள்ளன.