7வது சம்பள கமிஷன் டிஏ உயர்வு: அரசு ஊழியர்களுக்கு ஒரு மிக நல்ல செய்தி உள்ளது. புதிய ஆண்டு அதாவது 2023 ஆம் ஆண்டு அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய நற்செய்தியைக் கொண்டு வரப் போகிறது. 7வது ஊதியக் குழுவின் அறிக்கையின்படி, புத்தாண்டில் மத்திய ஊழியர்களின் சம்பளம் அமோகமாக உயர்த்தப்பட உள்ளது. ஊழியர்களுக்கு அரசிடமிருந்து ஒன்றல்ல இரண்டல்ல மூன்று பம்பர் பரிசுகள் கிடைக்கப் போகின்றன. இந்த மூன்றின் அடிப்படையில், ஊழியர்களின் சம்பளத்தில் மிகப்பெரிய உயர்வு இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அகவிலைப்படி உயர்வு


ஜூலை 2022க்கான அகவிலைப்படியில் 4 சதவீதம் அதிகரிப்பு செப்டம்பரில் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு, 2023 ஜனவரியில் அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டால், அது 42 சதவீதமாக உயரும். 2024 தேர்தலுக்கு முன், ஊழியர்களுக்கு கூடுதல் பரிசுகளை வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அரசாங்கத்தின் ஃபிட்மென்ட் ஃபாக்டர் குறித்த அறிவிப்பைத் தவிர, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மறுசீரமைப்பது குறித்தும் அறிவிக்கப்படலாம்.


ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 


மத்திய அரசு ஊழியர்களின் ஃபிட்மெண்ட் ஃபாக்டரை 2.57ல் இருந்து 3.68 ஆக மோடி அரசு உயர்த்தக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்படி நடந்தால், அரசு ஊழியர்களின் சம்பளத்தில் நல்ல ஏற்றம் இருக்கும். சுமார் 52 லட்சம் மத்திய ஊழியர்கள் கடந்த பல மாதங்களாக ஃபிட்மெண்ட் ஃபாக்டரை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். 


மேலும் படிக்க | 7th Pay Commission: புத்தாண்டில் அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தில் பம்பர் உயர்வு 


தற்போது ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000 ஆக உள்ளது. ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்த முடிவுக்குப் பிறகு இது ரூ.26,000 ஆக உயரும். இது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மீண்டும் வருமா பழைய ஓய்வூதியத் திட்டம்?


2024 மக்களவை தேர்தலை மனதில் வைத்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தும் உடிவை மத்திய அரசு எடுக்கக்கூடும். அப்படி நடந்தால் ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறும். பஞ்சாப் உள்ளிட்ட பல மாநில அரசுகள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளன. அரசாங்கத்தின் இந்தத் திட்டம் ஏப்ரல் 1, 2004 முதல் நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. புதிய திட்டத்தின்படி, ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளத்தில் 10 சதவீதத்தை ஓய்வூதியத்திற்கு வழங்குகிறார்கள். அதே நேரத்தில் அரசு 14 சதவீத பங்களிப்பை வழங்குகிறது.


மேலும் படிக்க | 7th Pay Commission: 2023ம் ஆண்டு மத்திய ஊழியர்களுக்கு லாட்டரி! சம்பளம் இரட்டிப்பாக்கப்படும் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ