7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி செய்தி, ஓய்வூதியம், கிராஜுவிட்டி கிடைக்காது

7th Pay Commission: அரசு, ஊழியர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை ஊழியர்கள் புறக்கணித்தால், பணி ஓய்வுக்குப் பின், ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடையை (கிராஜுவிட்டி) இழக்க நேரிடும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 19, 2022, 10:26 AM IST
  • அரசு பெரிய விதியை மாற்றியுள்ளது.
  • அரசு, ஊழியர்களுக்கு கடுமையான எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
  • பணியில் அலட்சியமாக செயல்பட்டால், பணி ஓய்வுக்கு பின், ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடையை நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி செய்தி, ஓய்வூதியம், கிராஜுவிட்டி கிடைக்காது title=

பணிக்கொடை மற்றும் ஓய்வூதியம் - புதிய விதி: மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் போனஸ் வழங்கப்பட்டதை அடுத்து, தற்போது அரசு பெரிய விதியை மாற்றியுள்ளது. அரசு, ஊழியர்களுக்கு கடுமையான எச்சரிக்கையும் விடுத்துள்ளது. இதை ஊழியர்கள் புறக்கணித்தால், பணி ஓய்வுக்குப் பின், ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடையை (கிராஜுவிட்டி) இழக்க நேரிடும். ஊழியர்களின் பணி குறித்து அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசின் புதிய விதிகளின்படி, பணியில் அலட்சியமாக செயல்பட்டால், பணி ஓய்வுக்கு பின், ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடையை நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மத்திய ஊழியர்களுக்குப் பொருந்தும். எனினும், வரும் காலங்களில் இதை மாநிலங்களும் அமல்படுத்தக்கூடும். 

அரசு அறிவிப்பை வெளியிட்டது

மத்திய அரசு சமீபத்தில் மத்திய சிவில் சர்வீசஸ் (ஓய்வூதியம்) விதிகள் 2021 இன் கீழ் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு சமீபத்தில் CCS (ஓய்வூதியம்) விதிகள் 2021 இன் விதி 8ஐ மாற்றியுள்ளது. அதில் புதிய விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. மத்திய பணியாளர் பணியின் போது ஏதேனும் கடுமையான குற்றமோ, அலட்சியமோ செய்தாலோ, குற்றம் நிரூபிக்கப்பட்டாலோ, பணி ஓய்வுக்குப் பிறகு அவரது பணிக்கொடை மற்றும் ஓய்வூதியம் நிறுத்தப்படும் என இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

மாற்றப்பட்ட விதிகள் குறித்த தகவல் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் மத்திய அரசு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமின்றி, குற்றம் செய்த ஊழியர்கள் குறித்த தகவல் கிடைத்தால், அவர்களின் ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடையை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதாவது, இந்த முறை இந்த விதியில் அரசு கடுமையாக உள்ளது.

ஓய்வுபெற்ற ஊழியர்களின் நியமன அதிகாரத்தில் ஈடுபட்டுள்ள அத்தகைய அதிகாரிகள் பணிக்கொடை அல்லது ஓய்வூதியத்தை நிறுத்தி வைக்க அதிகாரம் பெற்றுள்ளனர்.

- ஓய்வுபெறும் ஊழியர் நியமிக்கப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட அமைச்சகம் அல்லது துறையுடன் தொடர்புடைய செயலர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடையை நிறுத்தி வைக்கும் உரிமையும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு குட் நியூஸ், ஜனவரியில் மாபெரும் டிஏ ஹைக் 

- ஒரு ஊழியர் தணிக்கை மற்றும் கணக்குத் துறையில் இருந்து ஓய்வு பெற்றிருந்தால், குற்றம் செய்த ஊழியர் ஓய்வு பெற்ற பிறகு ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடையை நிறுத்தி வைக்க சிஏஜிக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? 

- வழங்கப்பட்ட விதியின்படி, பணியின் போது இந்த ஊழியர்கள் மீது ஏதேனும் துறை அல்லது நீதித்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், அதைப்பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டியது அவசியமாகும்.

- ஒரு ஊழியர் ஓய்வு பெற்ற பிறகு மீண்டும் நியமிக்கப்பட்டால், அதே விதிகள் அவருக்கும் பொருந்தும்.

- ஒரு ஊழியர் ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடையை பெற்றபின்னர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவரிடமிருந்து முழு அல்லது பகுதியளவு ஓய்வூதியம் அல்லது பணிக்கொடையை திரும்பப் பெறலாம்.

– இது துறைக்கு ஏற்பட்ட இழப்பின் அடிப்படையில் மதிப்பிடப்படும்.

- அதிகாரம் விரும்பினால், பணியாளரின் ஓய்வூதியம் அல்லது பணிக்கொடையை நிரந்தரமாக அல்லது சிறிது காலத்திற்கு நிறுத்தலாம்.

இறுதி உத்தரவுக்கு முன் பரிந்துரைகள் பெறப்பட வேண்டும்

இந்த விதியின்படி, அத்தகைய சூழ்நிலையில் எந்தவொரு அதிகாரமும் இறுதி உத்தரவை வழங்குவதற்கு முன் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனிடம் இருந்து பரிந்துரைகளை பெற வேண்டும். ஓய்வூதியம் நிறுத்தப்பட்டாலோ அல்லது திரும்பப் பெறப்பட்டாலோ, குறைந்தபட்சத் தொகை மாதத்திற்கு ரூ.9000க்கு குறைவாக இருக்கக்கூடாது. இது ஏற்கனவே விதி 44ன் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ஜாக்பார்ட்! மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்கப்போகும் புத்தாண்டு பரிசு! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News