8வது ஊதியக்கமிஷன், சமீபத்திய புதுப்பிப்பு: மத்திய அரசு பணிகளில் பணியாற்றும் மக்களுக்கு நற்செய்தி! ஊழியர்களின் ஊதியம் ரூ.8,000 உயரப் போகிறது என்று சில தகவல்கள் வெளிவந்துள்ளன. எப்படி இது நடக்கும்? ஊழியர்களின் சம்பளத்தில் இந்த ஏற்றம் வர காரணம் என்ன? இவற்றை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பண்டிகைக் காலங்களில் மத்திய அரசு ஊழியர்களுக்கு (Central Government Employees) அரசு தரப்பிலிருந்து பல நல்ல செய்திகள் கிடைத்துள்ளன. ஆனால் நல்ல செய்திகளுக்கான பட்டியல் இன்னும் நீளமாக உள்ளதாக ஒரு சாரார் கூறுகிறார்கள். ஊழியர்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூடிய இன்னும் பல செய்திகளை அவர்கள் எதிர்பார்க்கலாம் என கூறப்படுகின்றது. 


2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களுக்கு முன்னதாகவோ அல்லது அதற்கு பிறகோ ஊழியர்களின் பல கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என சிலர் கூறி வருகிறார்கள். இதில் முக்கியமான கோரிக்கை 8வது ஊதியக்குழிவின் (8th Pay Commission) உருவாக்கமாக இருக்கலாம். எனினும் இது குறித்து இன்னும் அரசாங்க தரப்பிலிருந்து எந்த உறுதியும் அளிக்கப்படவில்லை. இதனை பற்றி இங்கே விரிவாக காணலாம். 


8வது ஊதியக் குழு: பயன்பாட்டுக்கு எப்போது தயாராகும்?


ஊழியர்களின் ஊதிய கட்டமைப்பு, அதற்கான செயல்முறைகள் பற்றி தீர்மானிக்கும் ஊதியக் குழுவைப் பற்றி பேசுவதற்கு இது சரியான நேரமாக இருக்காது என சில நிபுணர்கள் கூறுகிறார்கள். இது குறித்த தெளிவான கண்ணோட்டம் கிடைக்க 2024 தேர்தல் வரை காத்திருக்க வேண்டும் என்பது அவர்களது கருத்தாக உள்ளது. 


எனினும் மற்றொரு சாரார், அரசு விரைவிலேயே 8வது ஊதியக்குழுவிற்கான அறிவிப்பை வெளியிடும் என கூறி வருகிறார்கள். இது 2024 இல் தொடங்கப்படும் என்றும் 2026 இல் அமலுக்கு வரும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். எட்டாவது ஊதியக் குழுவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், ஊழியர்களுக்கு அதிக சம்பளம் கிடைக்கும். 


மேலும் படிக்க | தீபாவளி போனஸ்! Tata Punch காம்பாக்ட் SUV காரை பரிசாக வழங்கும் ஃபார்மா கம்பெனி


8வது ஊதியக்குழு: எப்போது அதிக சம்பளம் கிடைக்கும்?


8வது ஊதியக்குழுவின் உருவாக்கத்தோடு சில வழக்கமான முறைகளும் மாற்றப்படக்கூடும் என கூறப்படுகின்றது. பத்து வருடங்களுக்கு ஒரு முறை என்பதற்கு பதிலாக அரசு ஒவ்வொரு வருடமும் ஊழியர்களின் சம்பளத்தை மதிப்பாய்வு செய்ய ஆரம்பிக்கலாம் என்று ஊடகங்க அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளது. சம்பள திருத்தத்திற்காக (Salary Hike) ஊழியர்கள் 10 ஆண்டுகள் அதாவது நீண்ட காலம் காத்திருக்க வேண்டாம் என அரசு விரும்புகிறது. அவர்களின் பணித்திறன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் அவர்களின் சம்பளத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும். 7வது ஊதியக் குழுவிலேயே (7th Pay Commission) இது பரிந்துரைக்கப்பட்டது. மேலும் சம்பளத்தை உயர்த்த ஊதியக்குழு அமைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து அம்சங்களையும் மனதில் வைத்து அரசு ஒரு புதிய வழியில் திட்டமிட்டு வருகிறது. குறைந்த ஊதிய வரம்பில் இருக்கும் ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும், அதிக வரம்பில் உள்ளவர்களுக்கு ஊதிய 3 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் ஊதிய பரீசலனை செய்யப்படக்கூடும் என கூறப்படுகின்றது. ஆனால், இதில் அரசு என்ன திட்டமிடப்பட்டது என்பது குறித்து இன்னும் எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. தற்போது அரசும் இதைப்பற்றி எதையும் வெளிப்படையாகக் கூறவில்லை. 


மேலும் அடுத்த ஊதியக்குழு வந்தவுடன் ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அடிப்படையில் ஏற்றம் ஏற்படலாம். மத்திய அரசு ஊழியர்களின் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் (Fitment Factor) 2.57 சதவீதமாக உள்ளது. இதன்படி மத்திய ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18,000 ஆகும். ஃபிட்மென்ட் ஃபாக்டரை 3.68 சதவீதமாக உயர்த்த கோரிக்கை உள்ளது. ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அதிகரித்தால், குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் 44 சதவீதத்திற்கு மேல் அதாவது ரூ.18,000 -இலிருந்து  நேரடியாக ரூ.26,000 ஆக உயரும்.


மேலும் படிக்க | Farmers: விவசாயிகளின் வருவாய்க்கு வரி விதிக்கும் மாநிலங்கள்! வேளாண் வரி எவ்வளவு?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ